Monday, 29 March 2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021

தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், 234 தொகுதிகளுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 2021 ஏப்ரல் 6 இல் நடைபெற்றது. இத்தேர்தலில் 

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் 12-வது முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அஇஅதிமுக தலைவர் எடப்பாடி க. பழனிசாமி முதலமைச்சராக இருந்த 15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் மே 3, 2021இல் முடிவடைந்தது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். இத்தேர்தல் கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுடன் சேர்த்து நடத்தப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.
மு. க. இசுட்டாலின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இந்திய தேசிய காங்கிரசு, கம்யூனிஸ்டுக் கட்சிகள், மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (ம.மு.கூ) கூட்டமைப்பில் திமுக போட்டியிட்டது. பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பாமக, பாஜக மற்றும் சிறிய கட்சிகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ச.கூ) என்ற கூட்டமைப்பில் அஇஅதிமுக போட்டியிட்டது. கோவிடு-19 வழிகாட்டி முறைகளுடன் தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தில் 72.81% வாக்குகள் பதிவாயின. தேர்தலுக்கு முன்னும் பின்னும் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள், இசுட்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கணித்தன. 2021 மே 2 அன்று வாக்குகள் எண்ணப்பட்டன; ம.மு.கூ 159 இடங்களைக் கைப்பற்றியது, இவற்றில் திமுக 125 தொகுதிகளில் வெற்றியைப் பதிவு செய்து, தனிப் பெரும்பான்மையைப் பெற்றது. தே.ச.கூ 75 இடங்களை வென்றது, இதில் 65 இடங்களை அதிமுக வென்றது. பத்தாண்டுகால அதிமுக ஆட்சியின் பிறகு, ஆறாவது முறையாக திமுக மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்தது. ஸ்டாலினும் அவரது அமைச்சரவையும் மே 7, 2021 அன்று பொறுப்பேற்றது.

Sunday, 28 February 2021

20-year-old Shrishti Goswami is Uttarakhand CM for a day

 Shrishti Goswami, a 19-year-old girl, was designated as one-day Chief Minister of Uttarakhand on the occasion of National Girl Child day on Sunday.

Speaking on the development, Ms Goswami's elated parents said, "Today we feel very proud, every daughter can achieve a milestone, we just need to support them. We want to thank the government a lot for considering our daughter worthy of this."

"Never stop supporting your daughters. In today's time, daughters can achieve everything. This should be an example for everyone. If she can achieve this milestone, every other daughter is capable of doing so. We are thankful to Trivendra Singh Rawat for giving Srishti this opportunity," said Praveen Puri, Srishti Goswami's father.

Talking about the opportunity, Srishti Goswami told ANI, "I am happy that I have got the privilege of becoming the Chief Minister on National Girl Child Day. I express my heartfelt gratitude to the Chief Minister of Uttarakhand. Also, I will be going through the presentations of various departments and will present my suggestions to them. My suggestions will prioritise girl child-centric issues."

The government, in 2008 declared January 24 to be celebrated as the National Girl Child Day every year with the objective of raising the consciousness of the society towards the girl child so that she can be valued and respected.

Sunday, 24 January 2021

நாட்டின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்?

 திருவனந்தபுரத்தில் உள்ள சிபிஎம் மாவட்ட செயலாளர் அனவூர் நாகப்பன், ஆர்யா மேயராக பதவியேற்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரத்தின் மேயராக பதவியேற்க போகிறார் என்பதும், இத்தனை இள வயதில் மேயராகும் முதல் நபர் என்பதும் பலரையும் புருவம் உயர்த்தவைத்தது.


தகவல் தெரிந்ததும், உள்ளாட்சி தேர்தலில் அவர் வென்ற தொகுதியான முடவன்முகலில் அவரை வரவேற்க தெருக்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குவிந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே தொகுதியைச் சேர்ந்தவரான நடிகர் மோகன்லால் ஆர்யாவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
”ஆர்யாவின் பெற்றோர் நீண்ட காலமாக கட்சியில் இருக்கிறார்கள். அவரது அப்பா ஒரு எலக்ட்ரீசியன். அம்மா எல்.ஐ.சி முகவராக இருக்கிறார்” எனக் கூறுகிறார் சி.பி.எம்மைச் சேர்ந்த கட்சித் தொண்டர் ஒருவர்.

”சிறுவயதிலிருந்தே அப்பாவுடன் கைகோர்த்து கட்சி நிகழ்ச்சிகளுக்கு சென்றேன் என எல்லாரும் கூறுவார்கள். ஆனால் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பாலசங்கத்தில் சேர்ந்தது முதலாக கட்சி நினைவுகள் ஞாபகமிருக்கிறது” என்று கூறுகிறார் ஆர்யா.பால சங்கத்தில் துடிப்புடன் பணிபுரிந்து மாநில தலைவராகியிருக்கிறார். கல்லூரிக்குச் சென்றதும் மாணவர் அமைப்பில் சேர்ந்து பணிபுரிந்து, பின்பு மாநில உறுப்பினராகியிருக்கிறார். ”தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைப்பு அனுபவம் மிகவும் உதவியாக இருந்தது. மக்களிடம் கொள்கைகளை நன்றாக புரியவைக்க முடிந்தது” என்று கூறுகிறார் ஆர்யா.

செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான எந்த வித பதற்றமும் இல்லாமல், ”எனது தொகுதிக்கும், திருவனந்தபுரத்துக்கும் மிக முக்கியமாக செய்ய வேண்டிய பணியாக நினைப்பது கழிவு மேலாண்மை, கோவிட் காலத்தில் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சுகாதார நிலையங்களில் இது மிக முக்கியமான அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்களை நோக்கிய திட்டங்கள் சீரிய வகையில் முன்னெடுக்கப்படும்” எனத் தடங்கலில்லாமல் பேசி முடித்திருக்கிறார்.

இளம் மேயருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறது கேரளம்.


Friday, 25 December 2020

Sister Abhaya murder case

 Abhaya was a member of St. Joseph's Congregation for religious sisters under the Syro-Malabar Catholic Archeparchy of Kottayam, Kerala. The local police which investigated the case initially closed it with a theory of suicide. The Crime Branch (DYSP KT Michael) which took up the investigation later tried to strengthen the suicide theory, with claims of psychological illness of the deceased. Following popular pressure and a legal battle launched by Jomon Puthenpurackal, a human-rights activist who established and led the “Sister Abhaya Case Action Council”, the High Court of Kerala transferred the investigation to the Central Bureau of Investigation (CBI) in 1993. The first team of CBI failed to find the reason of death. Upon the instruction of the court, a second-team was set up, which concluded that it was indeed a murder, but there was not enough evidence leading to the murderer(s). Court installed the third team of CBI, and they finally found two priests and a sister responsible for the murder and arrested them on 19 November 2008. On 17 July 2009, charges of murder, and destruction of evidence were filed against the three On 22 December 2020, a special CBI court in Kerala's Thiruvananthapuram delivered its verdict in the 28-year-old murder case as it held Father Thomas Kottoor and Sister Sephy guilty.They were sentenced to life imprisonment on 23 December 2020.




Sunday, 29 November 2020

மறக்க முடியுமா இந்த மரடோனாவை.(Diego Maradona)..!!!


 கால்பந்து விளையாட்டின் கடவுளாக போற்றப்பட்டவர், மரடோனா. ஒரு ‘மேஜிக்’ நிபுணர்போல், ரசிகர்களின் கண்களே நம்பாத அளவுக்கு, பந்துகளை லாவகமாக உதைத்து கோலாக்குவதில் வல்லவர்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒருமுறை வாழ்க்கையைப்பற்றி குறிப்பிடும்போது, ‘ஒரு மனிதனின் வாழ்க்கை முட்புதர்களையும், களைகளையும் கொண்ட நிலமாக இருந்தாலும், அங்கும் நல்ல விதை முளைத்து எல்லோருக்கும் பயன்தரத்தக்க ஒரு நல்லமரமாக வளர எப்போதும் ஒரு இடம் உண்டு’ என்று கூறினார். அதுபோல, ஏழ்மையான ஒரு பெற்றோருக்கு பிறந்து, குடிசைப் பகுதியில் இளமையில் வாழ்ந்தாலும், அர்ஜென்டினா நாட்டை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் புகழை சேர்த்த டியகோ ஆர்மன்டோ மரடோனா, தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடிய ஒரு மாதத்துக்குள் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கால்பந்து விளையாட்டின் கடவுளாக போற்றப்பட்டவர், மரடோனா. ஒரு ‘மேஜிக்’ நிபுணர்போல், ரசிகர்களின் கண்களே நம்பாத அளவுக்கு, பந்துகளை லாவகமாக உதைத்து கோலாக்குவதில் வல்லவர். 1986-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் மொத்தம் 5 கோல்கள் அடித்து கோப்பையை வென்று அர்ஜென்டினாவுக்கு உலக அரங்கில் புகழை கொடுத்தவர். பிரேசிலைச் சேர்ந்த பீலே விளையாடிய காலத்தில், அவரது அணியில் நிறைய சிறந்த வீரர்கள் இருந்தனர். ஆனால் மரடோனா விளையாடும்போது அந்த அணியில் குறிப்பிட்டு சொல்லும்படியான திறமைகொண்ட வீரர்கள் கிடையாது. அந்த அணியின் கேப்டனான மரடோனாதான் கால்இறுதியில் இங்கிலாந்தையும், அரைஇறுதியில் பெல்ஜியத்தையும், இறுதிப்போட்டியில் மேற்கு ஜெர்மனியையும் தோற்கடித்ததில் முக்கிய பங்காற்றினார்.

அர்ஜென்டினா அணிக்காக 91 போட்டிகளில், 34 கோல்கள் அடித்திருந்தாலும், 1986-ம்ஆண்டு உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், அவர் நீண்டதூரத்தில் இருந்து பந்தை கடத்தி கொண்டுவந்து, இங்கிலாந்தின் 5 வீரர்களை சாதுர்யமாக ஏமாற்றி அடித்த 2-வது கோல்தான் இந்த நூற்றாண்டின் சிறந்த கோலாக கருதப்பட்டது. மின்னல் வேகத்தில் அவர் அடிக்கும் கோல்கள் கையால் அடித்தாரா?, காலால் அடித்தாரா? என்பதுகூட யாருக்கும் தெரியாது. இதே ஆட்டத்தில் அவர் கையால் பந்தை கோலுக்குள் அடித்ததாக ஒரு பேச்சு வந்தபோது, ‘அது கடவுளின் கை அடித்த கோல்’ என்று கூறிவிட்டார். 2012-ம்ஆண்டு கேரளாவில் உள்ள கண்ணூருக்கும், 2017-ம்ஆண்டு கொல்கத்தாவுக்கும் வந்திருந்த நேரத்தில், ரசிகர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்யும் வகையில், பந்தை காலால் மாறிமாறி கடத்தி அடித்து, நெஞ்சில் ஏந்தி அடித்து, தலையால் முட்டியதைத்தான் மறக்க முடியுமா!.

ஒரு விளையாட்டில், ஒருவர் எப்படி புகழின் உச்சிக்கு சென்று, ஆண்டுகள் மறைந்தாலும், ரசிகர்களின் மனதில் இருந்து மறைய முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த மரடோனா, ஒரு வீரர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார். 1994-ம்ஆண்டு உலக கோப்பை போட்டிக்காக ஆடியபோது, போதை மருந்து சாப்பிட்டார் என்று வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு போதை மருந்துகளுக்கு அடிமையானார். உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் சிகிச்சைகளுக்கு பிறகு மீண்டார்.

மரடோனா இந்தியா மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். இந்தியாவுக்காக அவர் சொன்ன அறிவுரையை இந்திய கால்பந்து சம்மேளனமும், மத்திய அரசாங்கமும் முக்கியமாக எடுத்துக்கொண்டால், நிச்சயம் இந்தியாவிலும் நூற்றுக்கணக்கான மரடோனாக்கள் உருவாக முடியும். கொல்கத்தாவுக்கு அவர் வந்திருந்தபோது ஒரு பேட்டியில், ‘உங்கள் கால்பந்து சம்மேளனத்திடம் சொல்லுங்கள். அவர்கள் உங்கள் நாட்டில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்துவதில் தீவிரமாக ஈடுபடவேண்டும். ஏனெனில், இந்த நாட்டில் கால்பந்து விளையாட்டு மீது தணியாத ஆர்வம் இருக்கிறது. ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் விளையாடியதை பார்த்தேன். சரியான கட்டமைப்பு வசதிகளையும், பயிற்சிகளையும் அளித்தால், இந்தியா மிகச்சிறந்த இடத்துக்கு முன்னேற முடியும்’ என்று கூறினார். இதையே மரடோனா கூறிய கடைசி அறிவுரையாக ஏற்று, இந்திய கால்பந்து விளையாட்டை உலக அரங்கில் மிளிரச் செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கவேண்டும் என்பதே, மரடோனாவுக்காக கண்ணீர் சிந்தும் இந்திய ரசிகர்களின் கனவாகும்.


Sunday, 11 October 2020

U.P ஹத்ராஸ் - கூட்டு பாலியல் வன்கொடுமை - மறக்க முடியாத வலி

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான இளம்  பெண், கடந்த Sep 14ஆம் தேதி நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியது. உடனே டெல்லியில் உள்ள சாஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 15 நாட்களுக்கும் மேலாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் வட இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

இளம்பெண்ணிற்கு நீதி வேண்டும்

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள், திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். இறந்த பெண்ணிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த சூழலில் உயிரிழந்த பெண்ணின் உடலுடன் அவரது குடும்பத்தார் டெல்லி மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு புறப்பட்டனர்.

அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸிற்கு குடும்பத்தார் செல்வதற்கு முன்னரே உயிரிழந்த பெண்ணின் உடலை போலீசார் கொண்டு சென்றுவிட்டனர். இதையடுத்து உடலை நேரடியாக மயானத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இளம்பெண்ணின் தந்தை ஹத்ராஸ் வந்தவுடன், அவரை அவசர அவசரமாக மயானத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அவசரம் காட்டிய போலீசார்

பின்னர் உடனடியாக அவரது மகளின் உடலை எரிக்க வேண்டும் என்று போலீசார் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு உயிரிழந்த பெண்ணின் சகோதரர் பேட்டியளிக்கையில் தெரிவித்துள்ளார். மற்றொரு உறவினர் கூறுகையில், பெண்ணின் தந்தை சுமார் 40 பேருடன் மயானத்திற்கு சென்றார். அப்போது பூல் கார்ஹி கிராமத்திற்கு அருகேவுள்ள மயானத்தில் பெண்ணின் உடலை உடனடியாக எரித்தாக வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர். 

வழக்கை மூடி மறைக்கும் முயற்சியா?

ஏன் இவ்வளவு அவசரம் காட்டினர் என்று தெரியவில்லை. எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு என்ன தான் வேண்டும். என்ன மாதிரியான அரசியல் இது? எங்கள் மகள் வன்புணர்விற்கு ஆளாக்கப்படவில்லை என்று ஏதேதோ கதை கூறுகின்றனர். இந்த விஷயத்தை அப்படியே மூடி மறைக்கத் தான் இப்படி செய்ததாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் நேற்று நள்ளிரவே இளம்பெண்ணின் உடல் எரிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மயானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் யாரையும் அப்பகுதியில் அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதுபற்றி ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் விர் கூறுகையில், அனைத்து நடவடிக்கைகளும் அப்பெண்ணின் குடும்பத்தார் விருப்பப்படியே நடந்துள்ளது என்று தெரிவித்தார்.

விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

இந்த சம்பவம் விசாரிக்க மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். விரைவாக விசாரித்து அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.



Tuesday, 29 September 2020

மகிழ்ச்சியளிக்கும் தமிழக கல்வி தரம்!


 2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடந்தது.

2017-ம் ஆண்டு முதல் நாடு முழுவதுக்கும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வு கொண்டுவரப்பட்டது. “ ‘நீட்’ தேர்வு வினாத்தாள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது, மாநில கல்வித் திட்டத்தில் படித்தவர்களால், இந்த தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. எனவே, ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. ‘நீட்’ தேர்வு அச்சத்தால் இதுவரை 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே, இந்த ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டுக்கு வேண்டவே வேண்டாம் என்று விடப்படும் கோரிக்கையை ஒருபோதும் மறுப்பதற்கு இல்லை.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு இணையான அளவு மாநில பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகளை ஏற்று கல்வித்துறை 2018-2019-ம் ஆண்டு பிளஸ்-1, 2019-2020-ம் ஆண்டு பிளஸ்-2 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களையும் மாற்றியமைத்தது. இந்த புதிய பாடத்திட்டம் எதற்கும் சளைத்ததல்ல என்பதை கடந்த 13-ந்தேதி நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வு வினாத்தாள் நிரூபித்து காட்டியுள்ளது. ‘நீட்’ தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 97 சதவீத கேள்விகள் தமிழ்நாட்டில் இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகங்களில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 180 கேள்விகளில், 174 கேள்விகளுக்கான பதில் பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகத்திலேயே இடம்பெற்றுள்ளன.

2017-ம் ஆண்டு ‘நீட்’ தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 60 சதவீத கேள்விகள்தான், பழைய பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்தன. ஆனால், தற்போது நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வில், உயிரியல் பாடத்தில் கேட்கப்பட்ட 90 கேள்விகளில் 87 கேள்விகளுக்கான விடைகள் மாநில பாடத்திட்டத்திலேயே இருக்கிறது. அதில், 54 சதவீத கேள்விகள் பிளஸ்-1 பாடப்புத்தகத்தில் இருந்தும், 46 சதவீத கேள்விகள் பிளஸ்-2 பாடப்புத்தகத்தில் இருந்தும் கேட்கப்பட்டிருந்தன. வேதியியல், இயற்பியல் பாடங்களின் வினாக்களும் பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகங்களில் இருந்து ஏறத்தாழ சரிசமமாக கேட்கப்பட்டிருந்தன.

முன்பெல்லாம் பள்ளிக்கூடங்களில் பிளஸ்-2 இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக, பிளஸ்-1 பாடப்புத்தகங்களில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. பள்ளிக்கூடங்களிலும் பிளஸ்-1 வகுப்பிலேயே பிளஸ்-2 பாடத்தை நடத்த தொடங்கி விடுவார்கள். இதனால், பிளஸ்-1 பாடங்கள் குறித்த கல்வியறிவு மாணவர்களுக்கு குறைவாகவே இருந்தது. உயர் படிப்புகளுக்கு, குறிப்பாக என்ஜினீயரிங் படிப்புகளுக்கு மாணவர்கள் செல்லும்போது, தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டனர்.

இதற்கிடையே, கடந்த 2018-ம் ஆண்டு முதல் பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. இதனால், ஆசிரியர்களும் பிளஸ்-2 வகுப்புக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பிளஸ்-1 வகுப்புக்கும் கொடுக்கத் தொடங்கினார்கள். அதற்கான பலன் தற்போதைய ‘நீட்’ தேர்வில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த ‘நீட்’ தேர்வில் பிளஸ்-1 பாடங்களில் இருந்தும் சரிசமமாக கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இனி பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளை ஏற்ற இறக்கத்துடன் பார்க்கக் கூடாது என்பதை இந்த ‘நீட்’ தேர்வு உணர்த்தியுள்ளது.

இதையெல்லாம் வைத்துக்கொண்டு, நமது மாணவர்களால் தான் இனி ‘நீட்’ தேர்வு எழுதக்கூடிய அளவுக்கு அறிவு இருக்குமே, பிறகு ஏன் இந்த தேர்வை நடத்தக்கூடாது? என்று வாதம் செய்வதில் பொருள் இல்லை. ‘நீட்’ தேர்வில் கலந்துகொள்வதற்கு சமமான கற்றல் வாய்ப்பு, சமமான ஆடுகளம் வேண்டும். தேர்வை எதிர்கொள்ள தொழில்நுட்ப ஆற்றலும் வேண்டும். அதற்கெல்லாம் தனியாக பயிற்சி மையங்களில் படித்தால் தான் முடியும். அந்த அளவு வசதி, வாய்ப்புகள் தமிழகத்திலுள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு கிடையாது. எனவே, சிறந்த கல்வித்தரத்துடன் கூடிய பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தவேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...