தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், 234 தொகுதிகளுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 2021 ஏப்ரல் 6 இல் நடைபெற்றது. இத்தேர்தலில்
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் 12-வது முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அஇஅதிமுக தலைவர் எடப்பாடி க. பழனிசாமி முதலமைச்சராக இருந்த 15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் மே 3, 2021இல் முடிவடைந்தது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். இத்தேர்தல் கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுடன் சேர்த்து நடத்தப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.
மு. க. இசுட்டாலின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இந்திய தேசிய காங்கிரசு, கம்யூனிஸ்டுக் கட்சிகள், மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (ம.மு.கூ) கூட்டமைப்பில் திமுக போட்டியிட்டது. பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பாமக, பாஜக மற்றும் சிறிய கட்சிகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ச.கூ) என்ற கூட்டமைப்பில் அஇஅதிமுக போட்டியிட்டது. கோவிடு-19 வழிகாட்டி முறைகளுடன் தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தில் 72.81% வாக்குகள் பதிவாயின. தேர்தலுக்கு முன்னும் பின்னும் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள், இசுட்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கணித்தன. 2021 மே 2 அன்று வாக்குகள் எண்ணப்பட்டன; ம.மு.கூ 159 இடங்களைக் கைப்பற்றியது, இவற்றில் திமுக 125 தொகுதிகளில் வெற்றியைப் பதிவு செய்து, தனிப் பெரும்பான்மையைப் பெற்றது. தே.ச.கூ 75 இடங்களை வென்றது, இதில் 65 இடங்களை அதிமுக வென்றது. பத்தாண்டுகால அதிமுக ஆட்சியின் பிறகு, ஆறாவது முறையாக திமுக மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்தது. ஸ்டாலினும் அவரது அமைச்சரவையும் மே 7, 2021 அன்று பொறுப்பேற்றது.
Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம் . இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவை . இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும். ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் மகிழம் பூ: இதன் பழம் சாப்பிட உகந்தவை . இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர். இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தி...