Skip to main content

மறக்க முடியுமா இந்த மரடோனாவை.(Diego Maradona)..!!!


 கால்பந்து விளையாட்டின் கடவுளாக போற்றப்பட்டவர், மரடோனா. ஒரு ‘மேஜிக்’ நிபுணர்போல், ரசிகர்களின் கண்களே நம்பாத அளவுக்கு, பந்துகளை லாவகமாக உதைத்து கோலாக்குவதில் வல்லவர்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒருமுறை வாழ்க்கையைப்பற்றி குறிப்பிடும்போது, ‘ஒரு மனிதனின் வாழ்க்கை முட்புதர்களையும், களைகளையும் கொண்ட நிலமாக இருந்தாலும், அங்கும் நல்ல விதை முளைத்து எல்லோருக்கும் பயன்தரத்தக்க ஒரு நல்லமரமாக வளர எப்போதும் ஒரு இடம் உண்டு’ என்று கூறினார். அதுபோல, ஏழ்மையான ஒரு பெற்றோருக்கு பிறந்து, குடிசைப் பகுதியில் இளமையில் வாழ்ந்தாலும், அர்ஜென்டினா நாட்டை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் புகழை சேர்த்த டியகோ ஆர்மன்டோ மரடோனா, தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடிய ஒரு மாதத்துக்குள் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கால்பந்து விளையாட்டின் கடவுளாக போற்றப்பட்டவர், மரடோனா. ஒரு ‘மேஜிக்’ நிபுணர்போல், ரசிகர்களின் கண்களே நம்பாத அளவுக்கு, பந்துகளை லாவகமாக உதைத்து கோலாக்குவதில் வல்லவர். 1986-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் மொத்தம் 5 கோல்கள் அடித்து கோப்பையை வென்று அர்ஜென்டினாவுக்கு உலக அரங்கில் புகழை கொடுத்தவர். பிரேசிலைச் சேர்ந்த பீலே விளையாடிய காலத்தில், அவரது அணியில் நிறைய சிறந்த வீரர்கள் இருந்தனர். ஆனால் மரடோனா விளையாடும்போது அந்த அணியில் குறிப்பிட்டு சொல்லும்படியான திறமைகொண்ட வீரர்கள் கிடையாது. அந்த அணியின் கேப்டனான மரடோனாதான் கால்இறுதியில் இங்கிலாந்தையும், அரைஇறுதியில் பெல்ஜியத்தையும், இறுதிப்போட்டியில் மேற்கு ஜெர்மனியையும் தோற்கடித்ததில் முக்கிய பங்காற்றினார்.

அர்ஜென்டினா அணிக்காக 91 போட்டிகளில், 34 கோல்கள் அடித்திருந்தாலும், 1986-ம்ஆண்டு உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், அவர் நீண்டதூரத்தில் இருந்து பந்தை கடத்தி கொண்டுவந்து, இங்கிலாந்தின் 5 வீரர்களை சாதுர்யமாக ஏமாற்றி அடித்த 2-வது கோல்தான் இந்த நூற்றாண்டின் சிறந்த கோலாக கருதப்பட்டது. மின்னல் வேகத்தில் அவர் அடிக்கும் கோல்கள் கையால் அடித்தாரா?, காலால் அடித்தாரா? என்பதுகூட யாருக்கும் தெரியாது. இதே ஆட்டத்தில் அவர் கையால் பந்தை கோலுக்குள் அடித்ததாக ஒரு பேச்சு வந்தபோது, ‘அது கடவுளின் கை அடித்த கோல்’ என்று கூறிவிட்டார். 2012-ம்ஆண்டு கேரளாவில் உள்ள கண்ணூருக்கும், 2017-ம்ஆண்டு கொல்கத்தாவுக்கும் வந்திருந்த நேரத்தில், ரசிகர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்யும் வகையில், பந்தை காலால் மாறிமாறி கடத்தி அடித்து, நெஞ்சில் ஏந்தி அடித்து, தலையால் முட்டியதைத்தான் மறக்க முடியுமா!.

ஒரு விளையாட்டில், ஒருவர் எப்படி புகழின் உச்சிக்கு சென்று, ஆண்டுகள் மறைந்தாலும், ரசிகர்களின் மனதில் இருந்து மறைய முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த மரடோனா, ஒரு வீரர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார். 1994-ம்ஆண்டு உலக கோப்பை போட்டிக்காக ஆடியபோது, போதை மருந்து சாப்பிட்டார் என்று வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு போதை மருந்துகளுக்கு அடிமையானார். உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் சிகிச்சைகளுக்கு பிறகு மீண்டார்.

மரடோனா இந்தியா மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். இந்தியாவுக்காக அவர் சொன்ன அறிவுரையை இந்திய கால்பந்து சம்மேளனமும், மத்திய அரசாங்கமும் முக்கியமாக எடுத்துக்கொண்டால், நிச்சயம் இந்தியாவிலும் நூற்றுக்கணக்கான மரடோனாக்கள் உருவாக முடியும். கொல்கத்தாவுக்கு அவர் வந்திருந்தபோது ஒரு பேட்டியில், ‘உங்கள் கால்பந்து சம்மேளனத்திடம் சொல்லுங்கள். அவர்கள் உங்கள் நாட்டில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்துவதில் தீவிரமாக ஈடுபடவேண்டும். ஏனெனில், இந்த நாட்டில் கால்பந்து விளையாட்டு மீது தணியாத ஆர்வம் இருக்கிறது. ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் விளையாடியதை பார்த்தேன். சரியான கட்டமைப்பு வசதிகளையும், பயிற்சிகளையும் அளித்தால், இந்தியா மிகச்சிறந்த இடத்துக்கு முன்னேற முடியும்’ என்று கூறினார். இதையே மரடோனா கூறிய கடைசி அறிவுரையாக ஏற்று, இந்திய கால்பந்து விளையாட்டை உலக அரங்கில் மிளிரச் செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கவேண்டும் என்பதே, மரடோனாவுக்காக கண்ணீர் சிந்தும் இந்திய ரசிகர்களின் கனவாகும்.


Popular posts from this blog

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழம் மரத்தை பற்றி

Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம் . இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவை . இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும். ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் மகிழம் பூ: இதன் பழம் சாப்பிட உகந்தவை . இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர். இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தி...

பூலான் தேவி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பூலான் தேவி ( Phoolan Devi , Aug 10, 1963 - Jul 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரியும் பின்னாளில் அரசியல்வாதியுமாக இவர் அறியப்படுகிறார். பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் ஒடுஇக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன். திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வே...

ஆர்க்டிக் டெர்ன் பறவை

ஆர்க்டிக் டெர்ன்  (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் பறவையாகும். வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களின் வழியே தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் வலசை போகின்றன. வலசை போவதன் மூலம் ஆர்டிக் டெர்ன் சுமார் 35,000 கி. மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் ஆகும். சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவையானது, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வரும் வரை சுமார் 70,900 கி.மீ பயணித்து விடுகிறது. [3] இது உலகில் அறியப்படும் நீண்ட தூரம் வலசை போகும் மற்ற விலங்கினங்களை விட அதிகமான வலசை போகும் தூரமாகும். இப்பறவை ஆர்க்டிக் வட்டமான துந்திராவில் இனப்பெருக்கம் செய்கிறது.