Tuesday, 11 September 2012

வாழையடி வாழையாக வஞ்சம் தொடர்வதா?



பழிக்குப் பழியாக நடக்கும் கொலை சம்பவங்கள் எப்போதும் முடிவுக்கு வருவதில்லை. தொடர்கதை போல் மாறி மாறி இரு தரப்பிலும் ஆட்கள் பலியாகிக் கொண்டே இருப்பார்கள். இதனால் எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன. இருந்தாலும் தூக்கிய அரிவாளை கீழே வைக்க மாட்டார்கள். அதிலும் தென் மாநிலங்களில் இதுபோன்ற பழிக்குப் பழி கொலைகள் அதிகமாகவே நடக்கின்றன. நெல்லையில் ஒரே நாளில் 2 கொலைகள் விழுந்துள்ளன. நெல்லை தாழையூத்து அருகேயுள்ள மேலபால மடையை சேர்ந்தவர் விஜயராஜ். கட்டிட தொழிலாளி. 10 நாட்களுக்கு முன்புதான்  திருமணம் நடந்தது. ஒரு வீட்டில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்தபோது 4 பைக்கில் வந்த 8 பேர் கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் படுகாயமடைந்த அவர் இறந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள் கொலையாளிகள் தரப்பை சேர்ந்த 2 வீடுகள், கடைகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். அப்போது  தெருவில் வந்து கொண்டிருந்த டீக்கடை உரிமையாளர் மணி என்பவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். அங்கு பதற்றம் நீடிப்பதால் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விஜயராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த 2009ம் ஆண்டில் பேட்டை அருகேயுள்ள சுத்தமல்லியில் பழிக்குப்பழியாக எதிர் தரப்பை சேர்ந்த மதன், ஐயப்பன்,

மற்றொரு ஐயப்பன் ஆகிய மூன்று பேரை நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். மேலும் திண்டுக்கல்லில் பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக மேலபாலமடையை சேர்ந்த ராக்கெட் ராஜா ஆதரவாளரான ரவுடி ஸ்டீபனை வெட்டிக் கொன்றனர். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாகவே ஒரு கும்பல் விஜயராஜை வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. ஒரு கொலையில் ஆரம¢பித்தது எத்தனையோ கொலைகளுக்குப் பிறகும் நிற்பதாக இல்லை. இது இன்னமும் தொடரும். இன்னும் பல குடும¢பங்கள் பாதிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளும் பழி வாங்கும் எண்ணத்தோடு வளர்வார்கள். கொலை செய்யும் எண்ணம் அடுத்த தலைமுறைக்கும் பரவும். முடிவே இல்லாமல் வெட்டுக் குத்து என அடுத்தடுத்து நடந்தால், கோர்ட், சிறை என காலம் கழிந்தால் எப்படித்தான் இவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்? அரசியல், சமூக, மதத் தலைவர்கள் கூட்டாக சேர்ந்து நல்லெண்ணத்தை வளர்த்து மாற்றத்தை ஏற்படுத்தினால் நிலைமை மாறும். வாழையடி வாழையாக வஞ்சம் தொடர்வது யாருக்கும் லாபமில்லை.

அமைச்சர் காரை நிறுத்திய டிராபிக் போலீசுக்கு அடி, உதை : போலீஸ்காரர்கள் கைது


ஸ்ரீநகர் :காஷ்மீர் மாநிலத்தில் அமைச்சரின் காரை நிறுத்திய டிராபிக் போலீசுக்கு அடி, உதை விழுந்தது. இது தொடர்பாக அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். காஷ்மீர் மாநிலத்தில் நீர்பாசனத் துறை அமைச்சராக இருப்பவர் தாஜ் மொய்தீன். ஸ்ரீநகரின் லால் சவுக்கில் நேற்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காருக்கு பாதுகாப்பாக முன்னும் பின்னும் கார்கள் சென்றன. ஒரு சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மற்ற வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருக்க அமைச்சரின் கார் படை நிற்காமல் சென்றது. அங்கு பணியில் இருந்த டிராபிக் எஸ்ஐ மோகன்லால், இதை பார்த்தார். அதிரடியாக முன்னால் சென்று காரை மடக்கி நிறுத்தினார். ‘டிராபிக் விதிகள் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஏன் காரை நிறுத்தாமல் சென்றாய்Õ என கார் டிரைவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, காரில் இருந்து விறுவிறுவென இறங்கிய அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர்கள், மோகன்லாலை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது இடது கண்ணில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அமைச்சரின் காரை நிறுத்திய எஸ்ஐ தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் முகமது ஷபி மற்றும் முகமது அப்பாஸ் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கடுமை

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...