Monday, 6 January 2014

கச்சா எண்ணெய்

செளதி:ஆனால், பிற விவகாரங்களில் தன்னை அமெரிக்கா ஒதுக்க ஆரம்பித்துள்ளதாகவே செளதி கருதுகிறது. அதிலும் இந்த இரு நாடுகளையும் நெருக்கமாக்கிய கச்சா எண்ணெய் தான் இப்போது இரு நாடுகளையும் தூரமாக்கி வருகிறது. செளதி மீதான தனது சார்பு நிலையைக் குறைப்பதற்காக, சமீபகாலமாகவே செளதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா குறைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது. தனது நாட்டில் பெட்ரோலிய உற்பத்தியை அதிகரித்துவிட்ட அமெரிக்கா, பக்கத்தில் உள்ள வெனிசுவேலாவில் இருந்து (அங்கு ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்டுகளுடன் சண்டை போட்டுக் கொண்டே...) கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் இப்போது சீனாவுக்குத் தான் அதிகமான எண்ணெய்யை செளதி ஏற்றுமதி செய்து வருகிறது. இது தான் அமெரிக்கா-செளதி இடையிலான மோதலுக்கு மிக மிக முக்கியக் காரணம்.

அதே நேரத்தில் செளதி அரேபியாவிலிருந்து வெளியே வரும் கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்துவிடக் கூடாது என்பதும் அமெரிக்காவின் பிரார்த்தனை. காரணம், இந்த விலை சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்படுவதால், செளதியின் பெட்ரோலிய வரத்து குறைந்தால் உலகளவில் விலை கூடும், அமெரிக்கா உள்பட. ஆனால், இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் செளதி-அமெரிக்கா இடையிலான உறவு அவ்வளவு சீக்கிரத்தில் இறுதிக்கட்டத்தை எல்லாம் அடைந்துவிடாது. சண்டை போட்டுக் கொண்டே இருவரும் சேர்ந்து தான் இருப்பார்கள். அது எதுவரை என்கிறீர்களா? இந்த உலகத்தில் பெட்ரோலியமும் தீவிரவாதமும் இருக்கும் வரை!

Sunday, 5 January 2014

ஆர்க்டிக் டெர்ன் பறவை



ஆர்க்டிக் டெர்ன் (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் பறவையாகும். வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களின் வழியே தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் வலசை போகின்றன. வலசை போவதன் மூலம் ஆர்டிக் டெர்ன் சுமார் 35,000 கி. மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் ஆகும்.
சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவையானது, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வரும் வரை சுமார் 70,900 கி.மீ பயணித்து விடுகிறது.[3]இது உலகில் அறியப்படும் நீண்ட தூரம் வலசை போகும் மற்ற விலங்கினங்களை விட அதிகமான வலசை போகும் தூரமாகும். இப்பறவை ஆர்க்டிக் வட்டமான துந்திராவில் இனப்பெருக்கம் செய்கிறது.

இந்த ஆண்டில் 8 புதிய மாடல்களை களமிறக்க மஹிந்திரா திட்டம்

இந்த ஆண்டு 8 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. யுட்டிலிட்டி ரக கார் விற்பனையில் ஜாம்பவானாக இருந்தாலும், சிறிய கார் மார்க்கெட்டிலும், மிட்சைஸ் மார்க்கெட்டிலும் சரியான மாடல் இல்லாமல் மஹிந்திரா தவித்து வருகிறது.


இந்த நிலையில், இந்த மார்க்கெட்டில் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் விதத்தில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைமை நிர்வாகி பிரவீன் ஷா கூறுகையில்," இந்த ஆண்டில் 7 முதல் 8 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு கார் மார்க்கெட்டில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் மற்றும் உதவியில்லாமல் இந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. இந்த ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய மாடல்கள் மூலம் மார்க்கெட்டில் எங்களது பங்களிப்பை தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம்," என்றார். வெரிட்டோ, வைப் மற்றும் ஸ்கார்ப்பியோவின் மேம்படுத்தப்பட்ட மாடல்களை இந்த ஆண்டு மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. குவான்ட்டோவின் விற்பனையும் எதிர்பார்த்த அளவு இல்லாததால், அதற்கு மாற்றாக புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலை களமிறக்குவது குறித்தும் மஹிந்திரா பரிசீலித்து வருகிறது.

பனிப்பொழிவு எதிரொலி நியூயார்க்கின் 1000 விமானம் ரத்து




நியூயார்க்: அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக சுமார் 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேலை நாடுகளிலும் டிசம்பர் மாதம் தொடங்கி கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் ஒரு சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் காணப்படும் பனிப் பொழிவு மற்றும் பனிக்காற்று காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் காரணமாக நியூயார்க் நகரில் உள்ள 3 விமான நிலையங்களில் இருந்து செல்லும் 559 விமானங்களும், நியூயார்க் நகருக்கு வரவிருந்த 452 விமானங்களும் வெள்ளி கிழமை ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலையும் சீதோஷ்ண நிலையில் மாற்றம் இல்லாமல் பனி காணப்படுவதால் கென்னடி விமான நிலையத்தில் இருந்து 192 விமானங்களும், லிபர்டி விமான நிலையத்தில் இருந்து 285 விமானங்களும், லா கார்டியா நிலையத்தில் இருந்து 271 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் நகர விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விமான நிலையங்களின் ஓடு பாதையை மூடியுள்ள பனிப்படலங்களை விரைந்து அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

சளி, இருமலை போக்கும் பனை வெல்லம் விற்பனை ஜோர்

பண்ருட்டி: கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களுமே மக்களுக்கு பயன்படுகின்றன. பதநீர், நுங்கு, பனங்காய், கிழங்கு, மட்டை, ஓலை, பனங்கட்டை என ஒவ்வொரு பொருளுமே மக்களுக்கு பயன்படுகிறது. குறிப்பாக பதநீர் மிகுந்த சுவை மிகுந்தது. பதநீரை காய்ச்சினால் கருப்பட்டி எனப்படும் பனை வெல்லம் கிடைக்கும். நாளாக நாளாக பனைவெல்லம் கெட்டியாக, மாவு தன்மை கொண்டதாகவும் மாறும். இது மூலிகை வைத்தியங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த கருப்பட்டியை சுக்கு மற்றும் திப்பிலியுடன் பாலில் கலந்து இரவில் அருந்தினாலும், காலையில் சுடுநீர், டீ ஆகியவற்றில் கலந்து குடித்தாலும் உடலுக்கு நல்லது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். இருமல், சளி, மகப்பேறு மருந்து, நீரிழிவு ஆகியவற்றுக்கு அரு மருந்தாக உள்ளது. முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதிலாக பனை வெல்லத்தை பயன்படுத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். எந்த பக்க விளைவும் இதனால் ஏற்படுவதில்லை.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம். அதனால் இப்பகுதிகளில் கருப்பட்டி தொழிலும் சிறப்பாக நடந்தது. தற்போது பனைத்தொழில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. பனை மரம் ஏறும் ஆட்கள் கிடைப்பதில்லை. அதிக பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வந்து பதநீர் இறக்க வேண்டி உள்ளது.

 பனை வெல்லம் தற்பொழுது மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி, வடலூர் ஆகிய பகுதிகளில் மினி லாரி மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பண்ருட்டி பகுதியில் மினி வேனில் கொண்டு வந்து ஒரு கிலோ ரூ.100க்கு விற்கின்றனர்.

Wednesday, 1 January 2014

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்



தஞ்சாவூர்: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் (வயது 75) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 1937 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே இளங்காடு கிராமத்தில் பிறந்த நம்மாழ்வார், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தி வந்தார். அதே போல் விவசாயத்திற்கு வேதியியல் உரங்களை பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர். இயற்கை உரம், இயற்கையான உணவுமுறைகளுக்கு ஆதரவாக அவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை பட்டம் பெற்ற நம்மாழ்வார், கோவில்பட்டி மண்டல பயிர் ஆய்வகத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு களப்பணி இல்லாமல் நடைபெறும் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து அப்பணியில் இருந்து வெளியேறினார். விவசாயிகளின் போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமத்துக்கு நம்மாழ்வார் சென்றிருந்தார். அங்கு அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது...

Wednesday, 18 December 2013

லோக்பால் வந்தால் பிரதமர், சிபிஐக்கு சிக்கல்..!




டெல்லி: ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க லோக்பால் மசோதா, பெரும்பாலான கட்சிகள் முன்வைத்த திருத்தங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
அன்னா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து லோக்பால் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்தது. ஆனால் அந்த மசோதா வலுவானதாக இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
தற்போது வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி ஹசாரே சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த நிலையில் மத்திய அரசும் முந்தைய லோக்பால் மசோதாவில் திருத்தங்களை மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. வரலாற்று சிறப்புமிக்க மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...