Sunday, 5 January 2014

பனிப்பொழிவு எதிரொலி நியூயார்க்கின் 1000 விமானம் ரத்து




நியூயார்க்: அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக சுமார் 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேலை நாடுகளிலும் டிசம்பர் மாதம் தொடங்கி கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் ஒரு சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் காணப்படும் பனிப் பொழிவு மற்றும் பனிக்காற்று காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் காரணமாக நியூயார்க் நகரில் உள்ள 3 விமான நிலையங்களில் இருந்து செல்லும் 559 விமானங்களும், நியூயார்க் நகருக்கு வரவிருந்த 452 விமானங்களும் வெள்ளி கிழமை ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலையும் சீதோஷ்ண நிலையில் மாற்றம் இல்லாமல் பனி காணப்படுவதால் கென்னடி விமான நிலையத்தில் இருந்து 192 விமானங்களும், லிபர்டி விமான நிலையத்தில் இருந்து 285 விமானங்களும், லா கார்டியா நிலையத்தில் இருந்து 271 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் நகர விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விமான நிலையங்களின் ஓடு பாதையை மூடியுள்ள பனிப்படலங்களை விரைந்து அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...