பண்ருட்டி: கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களுமே மக்களுக்கு பயன்படுகின்றன. பதநீர், நுங்கு, பனங்காய், கிழங்கு, மட்டை, ஓலை, பனங்கட்டை என ஒவ்வொரு பொருளுமே மக்களுக்கு பயன்படுகிறது. குறிப்பாக பதநீர் மிகுந்த சுவை மிகுந்தது. பதநீரை காய்ச்சினால் கருப்பட்டி எனப்படும் பனை வெல்லம் கிடைக்கும். நாளாக நாளாக பனைவெல்லம் கெட்டியாக, மாவு தன்மை கொண்டதாகவும் மாறும். இது மூலிகை வைத்தியங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த கருப்பட்டியை சுக்கு மற்றும் திப்பிலியுடன் பாலில் கலந்து இரவில் அருந்தினாலும், காலையில் சுடுநீர், டீ ஆகியவற்றில் கலந்து குடித்தாலும் உடலுக்கு நல்லது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். இருமல், சளி, மகப்பேறு மருந்து, நீரிழிவு ஆகியவற்றுக்கு அரு மருந்தாக உள்ளது. முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதிலாக பனை வெல்லத்தை பயன்படுத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். எந்த பக்க விளைவும் இதனால் ஏற்படுவதில்லை.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம். அதனால் இப்பகுதிகளில் கருப்பட்டி தொழிலும் சிறப்பாக நடந்தது. தற்போது பனைத்தொழில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. பனை மரம் ஏறும் ஆட்கள் கிடைப்பதில்லை. அதிக பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வந்து பதநீர் இறக்க வேண்டி உள்ளது.
பனை வெல்லம் தற்பொழுது மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி, வடலூர் ஆகிய பகுதிகளில் மினி லாரி மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பண்ருட்டி பகுதியில் மினி வேனில் கொண்டு வந்து ஒரு கிலோ ரூ.100க்கு விற்கின்றனர்.
இந்த கருப்பட்டியை சுக்கு மற்றும் திப்பிலியுடன் பாலில் கலந்து இரவில் அருந்தினாலும், காலையில் சுடுநீர், டீ ஆகியவற்றில் கலந்து குடித்தாலும் உடலுக்கு நல்லது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். இருமல், சளி, மகப்பேறு மருந்து, நீரிழிவு ஆகியவற்றுக்கு அரு மருந்தாக உள்ளது. முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதிலாக பனை வெல்லத்தை பயன்படுத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். எந்த பக்க விளைவும் இதனால் ஏற்படுவதில்லை.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம். அதனால் இப்பகுதிகளில் கருப்பட்டி தொழிலும் சிறப்பாக நடந்தது. தற்போது பனைத்தொழில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. பனை மரம் ஏறும் ஆட்கள் கிடைப்பதில்லை. அதிக பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வந்து பதநீர் இறக்க வேண்டி உள்ளது.
பனை வெல்லம் தற்பொழுது மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி, வடலூர் ஆகிய பகுதிகளில் மினி லாரி மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பண்ருட்டி பகுதியில் மினி வேனில் கொண்டு வந்து ஒரு கிலோ ரூ.100க்கு விற்கின்றனர்.