Skip to main content

Posts

PEOPLE ARE AWESOME 2011

சஹாரா நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து ஸ்பான்சர் செய்ய முடிவு

இந்திய கிரிக்கெட் அணிக்கு  தொடர்ந்து ஸ்பான்ஷர்ஷிப் செய்வதற்கு சஹாரா நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிசிசிஐ மற்றும் சஹாரா நிறுவனத்துக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதை அடுத்து இத்தீர்மானத்தை எடுத்தாக சஹாரா நிறுவனம் கூறியுள்ளது. இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்கு பிரதான ஸ்பான்ஷர்ஷிப்பாளர்களான சஹாரா நிறுவனம் ஐ.பி.எல் போட்டிகளில், புனே வாரியர்ஸ் அணியின் உரிமையாளர்களாகவும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் சீசன் 5 இல், யுவராஜ் சிங் தொடர்ந்து புனே வாரியர்ஸில் விளையாட முடியாத காரணத்தினால், அவருக்கு பதில் மற்றுமொரு வெளிநாட்டு வீரரை அணியில் இடம்பெற செய்வதற்கு சஹாரா நிறுவனத்தினர் முயற்சி மேற்கொண்டு வந்தனர். மாற்றுவீரரை ஒப்பந்தம் செய்வதற்காக, யுவராஜ் சிங்கின் ஒப்பந்த தொகையை மீள் எடுத்துக்கொள்ளவும் அனுமதி கோரியிருந்தனர். எனினும் பிசிசிஐயுடன் இவ்விவகாரத்தில் முரண்பாடு ஏற்படவே, புனே வாரியார்ஸ் மற்றும் இந்திய தேசிய அணிக்கான ஸ்பான்ஷர்ஷிப்பிலிருந்து தாம் விலக போவதாக திடீர் அறிவிப்பு செய்திருந்தது சஹாரா நிறுவனம். இந்திய தேசிய அணி...

சங்கரன்கோவில் தேர்தல் களத்தில் குதிக்க பயந்த பாமக!

நெல்லை, பிப். 16- சங்கரன்கோவில் தொகுதியில் பாமக போட்டியிடவில்லை. யாராச்சும் போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு தருவோம் என்று விரக்தி கலந்த குரலில் கூறியுள்ளார் பாமக தலைவர் ஜி.கே.மணி. நெல்லை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ம.க.கட்சி சார்பில் புதிய அரசியல், புதிய கொள்கைகள் பற்றி புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழகம் முழுவதும் வெளியிட்டு வருகிறோம். பொதுமக்கள் புத்தகத்தை வாங்கி படித்து கருத்துகளை அனுப்பலாம். தமிழகத்தில் தற்போது 8 மணி நேர மின் வெட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு மற்றும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை போக்க தமிழக அரசு உடனடியாக மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் கேட்டு பெற வேண்டும். இது தற்போதைய பிரச்சினைக்கு மட்டும்தான் தீர்வாக அமையும். நிரந்தரமாக மின்தட்டுப்பாட்டை போக்க மின் திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும். அணு உலை மின்சாரத்தினால் ஆபத்து உள்ளது. அணு கழிவுகளை 500 ஆண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாது. அணு மின்சாரம் தயாரிப்பதை கைவிட வேண்டும். கூடங்குளம் அணுமின்திட்டத்தை 1990-ம் ஆண்டிலிருந்தே பா.ம.க. எதிர்த்து வருகிறது. தமிழகத்தில் ...

கமல் ரஜினி இணைந்து கலக்கும் மருதநாயகம் !

1997-ஆம் ஆண்டு இங்கிலாந்து மகாராணியார் சிறப்பு விருந்தினராக நேரில் வந்து பூஜையில் கலந்து கொள்ள… மருதநாயகம் படத்தின் தொடக்க விழா மிகச்சிறப்பாக நடந்தது. மருதநாயகம் தொடக்க விழாவில், மருதநாயகம் தோற்றத்தில் கமல் ராணியாரையும் மற்ற சிறப்பு விருந்தினர்களையும் வரவேற்றார். தொடக்கவிழாவுக்கு முன்பே டிரைலருக்காக 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார் கமல்! ஆனால் படம் ட்ரெயிலரோடு நின்றுபோனது. காரணம், இந்தியா பொக்ரானில் போட்ட அணுகுண்டு. இதன் காரணமாக இந்தியா மீது பொருளாதாரத் தடை பாய்ந்தது. இதனால், கமல்ஹாசன் நம்பியிருந்த வெளிநாட்டு நிதியுதவி தடைபட்டதால் படம் கிடப்பில் போடப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு முன்பு மருதநாயகத்தின் பட்ஜெட் 50 கோடி ரூபாய். ஆனால் எந்த நிறுவனமும் கமல்ஹாசனுக்காக ரூ 50 கோடியை முதலீடு செய்ய அன்று தயாராக இல்லை. இதை அவரே பல பேட்டிகளில் கூறி வந்தார். சில காலத்திற்கு முன்பு மருதநாயகத்தை தயாரிக்க சன் நிறுவனத்துடன் பேச்சு நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் மருதநாயகம் குறித்து கமல் பேச ஆரம்பித்துவிட்டார் கமல். இம்முறை தனது திரையுல நண்பர் ரஜினியையும் இணைத்த...

ஒரு வாரத்திற்குள் 5 மில்லியன் பேர் பார்த்த ஹாலிவூட் திரைப்பட ட்ரெய்லர் (வீடியோ)ஒரு வாரத்திற்குள் 5 மில்லியன் பேர் பார்த்த ஹாலிவூட் திரைப்பட ட்ரெய்லர் (வீடியோ

Iron Sky : எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி திரைக்கு வரவிருக்கும் சூப்பர் ஹாலிவூட் திரைப்படமிது. யூடியூப்பில் இதன் ட்ரெய்லர் தரவேற்றம் செய்யப்பட்டு, நான்கு நாட்களில் 5 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். இத்திரைப்படம் கடந்த 11ம் திகதி,  பேர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஒரே ஒரு தடவை பிரிமியர் ஷோவாக காட்சிப்படுத்தப்பட்டது. அதை பார்த்தவர்களின் பரப்புரையால் தான் யூடியூப்பில் இவ்வளவு ஹிட்ஸ் என்கிறார்கள். புதிய வகை திரைப்பட பாணியை சீரியஸாகவே அமல்படுத்துகிறதாம் இத்திரைப்படம். அதாவது சயன்பிக்க்ஷன் காமடி. 1945 இல் இரண்டாம் உலகமகா யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட, ஹிட்லரின் நாசி படைகள், இரகசியமாக அண்டார்ட்டிக்காவிலிருந்து, நிலவின் இருள் பகுதிக்கு ஒரு விண்வெளி ஓடத்தை அனுப்புகிறார்கள். அதில் செல்லும் விஞ்ஞானிகள், பெரிய விண்வெளி ஆயுத களஞ்சிய சாலை ஒன்றை உருவாக்கி தம்மை பூமியில் தோற்கடித்தவர்களை பழிவாங்குவதற்கு காத்திருக்கிறார்கள்.  2018 இல், அவர்கள் தங்களது விண்வெளி ஆயுத படையுடன் பூமியை திட்டமிட்டபடி தாக்குகிறார்கள், பிறகு என்ன நடைபெறுகிறது என்பதே கதைக்கரு. காமடி பாணியிலானது...

வீரபாண்டி ஆறுமுகம்-கருணாநிதிக்கு இடையிலான பூசல் நாளுக்கு நாள் அதிகரிப்பு: திமுக விரைவில் நடவடிக்கை

சென்னை, பிப். 15- திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம் மீது இதுவரை இல்லாத பெரும் வருத்தத்தில் திமுக தலைவர் கருணாநிதி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. மு.க.அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே நிலவி வரும் மோதலை மையமாக வைத்து வீரபாண்டியார் காய் நகர்த்தி வருவதாகவும், அந்த மோதலில் தான் பலனடைய பார்ப்பதாகவும் கருணாநிதி கருதுவதாகவும், விரைவில் வீரபாண்டியார் மீது நடவடிக்கை பாயலாம் என்றும் திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவில் எத்தனையோ தலைவர்கள் வந்துள்ளனர், போயுள்ளனர். அவர்கள் அத்தனை பேருக்குமே கருணாநிதி மனதில் ஒவ்வொரு இடம் இருக்கும். இருப்பினும் கருணாநிதி மனதில் தனி இடம் பிடித்துள்ளவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்டவர்களில் வீரபாண்டியாரும் ஒருவர். சேலத்தில் கட்சியைப் பற்றி கருணாநிதி ஒருமுறைகூட கவலைப்பட்டதில்லை. காரணம், வீரபாண்டியார் மீது அவருக்கு உள்ள நம்பிக்கை. கருணாநிதியின் நம்பிக்கையை ஒருமுறைகூட வீணடித்ததில்லை வீரபாண்டியார். சேலம் மாவட்டத்தில் கட்சியைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறார். தொடர்ந்து வெற்றிகளைத் தேடிக் கொடுத்தார். நாளை பொது...

ரூ.5,000 லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் 'நீதி'மோகன் கைது!

ரூ.5,000 லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் 'நீதி'மோகன் கைது! திருச்சி, பிப். 15- திருச்சியில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார். திருச்சியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் நில விவகாரம் தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர் தன்னை ஏமாற்றிவிட்டதாக திருச்சி மாநகர கமிஷனரிடம் புகார் கொடுத்தார். இப்புகாரை விசாரிக்குமாறு திருச்சி மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நீதிமோகனுக்கு திருச்சி மாநகர கமிஷனர் உத்தரவிட்டார். இந்த நிலையில் சரஸ்வதியின் புகாரை விசாரித்த நீதிமோகன் ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். நீதிமோகனுக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத சரஸ்வதி இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி அம்பிகாபதி தலைமையிலான அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் சரஸ்வதி நீதிமோகனுக்கு லஞ்சப் பணத்தை கொடுத்தார். அப்போது மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமோகனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.