இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து ஸ்பான்ஷர்ஷிப் செய்வதற்கு சஹாரா நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. பிசிசிஐ மற்றும் சஹாரா நிறுவனத்துக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதை அடுத்து இத்தீர்மானத்தை எடுத்தாக சஹாரா நிறுவனம் கூறியுள்ளது.
இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்கு பிரதான ஸ்பான்ஷர்ஷிப்பாளர்களான சஹாரா நிறுவனம் ஐ.பி.எல் போட்டிகளில், புனே வாரியர்ஸ் அணியின் உரிமையாளர்களாகவும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் சீசன் 5 இல், யுவராஜ் சிங் தொடர்ந்து புனே வாரியர்ஸில் விளையாட முடியாத காரணத்தினால், அவருக்கு பதில் மற்றுமொரு வெளிநாட்டு வீரரை அணியில் இடம்பெற செய்வதற்கு சஹாரா நிறுவனத்தினர் முயற்சி மேற்கொண்டு வந்தனர். மாற்றுவீரரை ஒப்பந்தம் செய்வதற்காக, யுவராஜ் சிங்கின் ஒப்பந்த தொகையை மீள் எடுத்துக்கொள்ளவும் அனுமதி கோரியிருந்தனர்.
எனினும் பிசிசிஐயுடன் இவ்விவகாரத்தில் முரண்பாடு ஏற்படவே, புனே வாரியார்ஸ் மற்றும் இந்திய தேசிய அணிக்கான ஸ்பான்ஷர்ஷிப்பிலிருந்து தாம் விலக போவதாக திடீர் அறிவிப்பு செய்திருந்தது சஹாரா நிறுவனம்.
இந்திய தேசிய அணிக்கான ஸ்பான்ஷர்ஷிப்பிலும் பல்வேறு சிக்கல்களை தாம் எதிர்கொண்டதாகவும், அண்மைக்காலமாக, போட்டி நிறுவனங்கள் பல ஸ்பான்ஷர்ஷிப் செய்ய முன்வந்துள்ளதால், தம்மை பிசிசிஐ இப்போது மதிப்பதில்லை எனவும் அந்நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சீனிவாசன் மற்றும் சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதோ ராய் இருவருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், இதில் சுமூக முடிவு எட்டப்பட்டதால் இந்திய அணிக்கான ஸ்பான்சர்ஷிப்பை நீட்டிப்பதற்கு சஹாரா நிறுவனம் முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் போது சஹாரா நிறுவனம் சில கடுமையான நிபந்தனைகளை விதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இம்முடிவுகளின் படி, ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் எந்தவொரு அணிக்கும் 4 வெளிநாட்டு வீரர்களுக்கு மேல் விளையாட அனுமதிக்காக பிசிசிஐ, யுவராஜ் சிங் சுகயீனம் காரணமாக புனே வாரியர்ஸிற்கு மாத்திரம் ஐந்து வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்கு பிரதான ஸ்பான்ஷர்ஷிப்பாளர்களான சஹாரா நிறுவனம் ஐ.பி.எல் போட்டிகளில், புனே வாரியர்ஸ் அணியின் உரிமையாளர்களாகவும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் சீசன் 5 இல், யுவராஜ் சிங் தொடர்ந்து புனே வாரியர்ஸில் விளையாட முடியாத காரணத்தினால், அவருக்கு பதில் மற்றுமொரு வெளிநாட்டு வீரரை அணியில் இடம்பெற செய்வதற்கு சஹாரா நிறுவனத்தினர் முயற்சி மேற்கொண்டு வந்தனர். மாற்றுவீரரை ஒப்பந்தம் செய்வதற்காக, யுவராஜ் சிங்கின் ஒப்பந்த தொகையை மீள் எடுத்துக்கொள்ளவும் அனுமதி கோரியிருந்தனர்.
எனினும் பிசிசிஐயுடன் இவ்விவகாரத்தில் முரண்பாடு ஏற்படவே, புனே வாரியார்ஸ் மற்றும் இந்திய தேசிய அணிக்கான ஸ்பான்ஷர்ஷிப்பிலிருந்து தாம் விலக போவதாக திடீர் அறிவிப்பு செய்திருந்தது சஹாரா நிறுவனம்.
இந்திய தேசிய அணிக்கான ஸ்பான்ஷர்ஷிப்பிலும் பல்வேறு சிக்கல்களை தாம் எதிர்கொண்டதாகவும், அண்மைக்காலமாக, போட்டி நிறுவனங்கள் பல ஸ்பான்ஷர்ஷிப் செய்ய முன்வந்துள்ளதால், தம்மை பிசிசிஐ இப்போது மதிப்பதில்லை எனவும் அந்நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சீனிவாசன் மற்றும் சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதோ ராய் இருவருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், இதில் சுமூக முடிவு எட்டப்பட்டதால் இந்திய அணிக்கான ஸ்பான்சர்ஷிப்பை நீட்டிப்பதற்கு சஹாரா நிறுவனம் முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் போது சஹாரா நிறுவனம் சில கடுமையான நிபந்தனைகளை விதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இம்முடிவுகளின் படி, ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் எந்தவொரு அணிக்கும் 4 வெளிநாட்டு வீரர்களுக்கு மேல் விளையாட அனுமதிக்காக பிசிசிஐ, யுவராஜ் சிங் சுகயீனம் காரணமாக புனே வாரியர்ஸிற்கு மாத்திரம் ஐந்து வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
