2014 ஆகஸ்ட் மாதத்திற்கு பின் இப்போது பெட்ரோல் விலை உச்சத்தை
எட்டியுள்ளது. நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.12. டீசல்
66.84. 2017 ஜூன் மாதம் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கும் முறை
அமலுக்கு வந்தபின் பெட்ரோல் விலை 8 சதவீதமும், டீசல் விலை 12 சதவீதமும்
உயர்ந்திருக்கிறது என்றால் மத்திய, மாநில அரசுகள் எந்த அளவுக்கு பெட்ரோலிய
பொருட்கள் மீது வரியை சுமத்தி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இதற்கும் 2014ல் பெட்ரோல் மற்றும் டீசலை பிரித்து எடுக்கும் கச்சா எண்ணெய்
விலை ஒரு பேரல் 109 டாலராக இருந்தது. அப்போதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை
ரூ.75க்குள் இருந்தது. இப்போது அதே கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 70
டாலருக்குள் தான் உள்ளது.
எப்படிப்பார்த்தாலும் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 முதல் 55க்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் விலை இந்த அளவுக்கு உயர காரணம் வரிகள். இது லாபத்திற்காகவும், அரசு வருமானத்திற்காகவும் மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை. இந்த விலையில் லிட்டருக்கு ரூ.19 மத்திய அரசு வரியாக வசூலிக்கிறது. அதே போல் தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு லிட்டர் விலையில் 34 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த அரசுகள் பற்றி புரிந்திருக்கும்.
அதனால்தான் பஸ்
கட்டணம் ஒரே இரவில் 60 முதல் 100 சதவீதம் வரை தமிழகத்தில் உயர்த்தப்பட்டு
இருக்கிறது. போக்குவரத்து துறையை சீரழித்த குறைகள், ஓட்டைகள், ஊழல்கள்
உள்பட இன்னும் பல காரணிகள் இன்று வரை திருத்தப்படவில்லை. அல்லது சரிசெய்ய
விரும்பவில்லை. ஆனால் சுமை மட்டும் மக்கள் தலையில். இது எந்த வகையில்
நியாயம்?. இதே போல் 2014ல் ரூ.450க்குள் இருந்த காஸ் சிலிண்டர் விலை இன்று
ரூ.750ஐ எட்டிவிட்டது. மானியம் எவ்வளவு வருகிறது என்பது ஒவ்வொருவரின் வங்கி
கணக்கை பார்த்தாலே தெரியும். அத்தனையும் மக்களை ஏமாற்றும் வேலை.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அரசுகளே இன்று சேவைக்குப்பதில், ஏழை எளிய
மக்களிடம் இருந்து பணம் பிடுங்கும் பணியை மட்டும் பிரதானமாக செய்து வருவது
நல்ல அரசுக்கு அழகல்ல. மக்களின் மேல் தாங்க முடியாத சுமையை ஏற்றுவதும்
நல்லதல்ல. இப்படிப்பட்ட நிலையை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கவும்
மாட்டார்கள். ஒட்டுமொத்தத்தில் விலைவாசியை உயர்த்தக்கூடிய அத்தனை
காரணிகளின் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொதித்துபோய் இருக்கும்
மக்கள் ஒருநாள் நிச்சயம் பதில் சொல்வார்கள்.
எப்படிப்பார்த்தாலும் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 முதல் 55க்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் விலை இந்த அளவுக்கு உயர காரணம் வரிகள். இது லாபத்திற்காகவும், அரசு வருமானத்திற்காகவும் மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை. இந்த விலையில் லிட்டருக்கு ரூ.19 மத்திய அரசு வரியாக வசூலிக்கிறது. அதே போல் தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு லிட்டர் விலையில் 34 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த அரசுகள் பற்றி புரிந்திருக்கும்.
