Skip to main content

தமிழர்களின் நாகரிகம்


லகில் பல நாடுகள், ‘‘நாங்கள் பண்டைய காலத்தி லிருந்து நாகரிகம் மிக்கவர்கள். எங்கள் வரலாறு போற்றுதலுக்குரியவை’’ என்று நெஞ்சம் நிமிர்த்தி சொல்வது வழக்கம். இந்த பெருமைக்கெல்லாம் அத்தாட்சி யாக, அசைக்கமுடியாத ஆதாரமாக அவர்கள் தங்கள் நாட்டில் நடந்த அகழ்வாராய்ச்சி காரணமாக வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளைத்தான் சொல்வார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால் இதுவரை சிந்து சமவெளி நாகரிகத் தைத்தான் பெருமையோடு கூறிக்கொண்டிருக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரிகம் சிறப்புக்குரியது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது. ஆனால், சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முன்பே, ‘‘முந்து சமவெளி நாகரிகமாக திகழ்ந்தது தமிழர்களின் நதிக்கரை நாகரிகம்தான்’’. தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த அடையாளம் இருக்கிறது என்றால், நிச்சயமாக பாண்டிய மன்னர்கள் தலைநகரமாக கொண்ட மதுரையைச் சுற்றிலும் இன்னும் நிறைய அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை கீழடி ஆய்வுமுடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. 

தொல்பொருள் கண்காணிப்பாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் தலைமையில் கடந்த 2015–ம் ஆண்டு மார்ச் மாதம் கீழடியில் ஆய்வுப்பணிகள் தொடங்கின. மார்ச் முதல் செப்டம்பர் வரை முதல்கட்ட ஆய்வும், 2016–ம் ஆண்டு ஜனவரி 18 முதல் செப்டம்பர் வரை 2–வது ஆய்வும் நடத்தப்பட்டு இதுவரை 100 குழிகள் தோண்டப்பட்டு 
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரியவகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கே உள்ள கட்டிட அமைப்புகள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்களையே அதிசயிக்க வைத்தது. 

இந்தநிலையில், இதை மேலும் தீவிரமாக அகழ்வா ராய்ச்சி நடத்தாமல், அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணனை அசாம் மாநிலத்திக்கு மாற்றியது அங்குள்ள மக்களை கொதிப்படைய வைத்துவிட்டது. இத்தகையச் சூழ்நிலையில் மத்திய கலாசார ராஜாங்க மந்திரி மகேஷ் ‌ஷர்மாவும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை ராஜாங்க மந்திரி நிர்மலா சீதாராமனும் கீழடிக்கு வந்து ஆய்வு நடத்தினர். தற்போது 3–ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சி மிகவும் சுமுகமான வகையிலும், சிறப்பாகவும் இருந்தது. கிறிஸ்து பிறப்பதற்கு 2 நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தப்பகுதியில் கலாசாரமும், நாகரிகமும் உயர்ந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வா ராய்ச்சியின் 3–ம் கட்ட பணிகளுக்காக 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மகேஷ் ‌ஷர்மா கூறியதுதான் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. 

அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருப்பது அங்குள்ள தென்னந்தோப்பில்தான். ஒன்று அந்த நிலத்தை வாங்க வேண்டும் அல்லது நீண்டகால ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். இதற்கு 40 லட்சம் ரூபாய் போதாது. இதில், அகழ்வாராய்ச்சிகளை எப்படி மேற்கொள்வது? இதுமட்டு மல்லாமல், ஏற்கனவே இரண்டு கட்டங்களில் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் சிவகங்கை, மதுரை, சென்னை மியூசியங்களில் வைக்கப்படும் என்று இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை டைரக்டர் ஜெனரல் அறிவித்துள்ளார். தமிழக அரசு அங்கேயே மியூசியம் வைக்க இடம் தருவதாக கூறியிருக்கிறது. உடனடியாக தமிழக அரசும், இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையும் இணைந்து கீழடியிலேயே ஒரு மியூசியம் வைக்க ஏற்பாடு செய்யவேண்டும். சிந்து சமவெளியில் அகழாய் வுகள் நடந்த இடங்களை அப்படியே வைத்திருக்கும்போது கீழடியில் ஏற்கனவே அகழாய்வு நடந்த இடங்களை மூடி விட்டார்கள். இதுபோன்ற நிலைமைகளை தவிர்த்து அகழாய்வு நடந்த இடங்களை அப்படியே வைத்திருந்தால் எதிர்கால சந்ததியினரும் அறிவதற்கு வசதியாக இருக்கும். கவிஞர் வைரமுத்து கூறியதுபோல இந்திய நாகரிகத்தின் இரு கண்கள் தமிழும்–வடமொழியும். இந்திய நாகரிகத்தின் இரண்டு பக்கங்கள் திராவிட நாகரிகமும்–ஆரிய நாகரிக முமாகும். அப்படி இருக்க ஒன்றை வளர்த்து அடுத்ததற்கு ஊக்கம் அளிக்காமல் இருப்பது சரியல்ல. தமிழர்களின் பண்டைய நாகரிகம் தரணிக்கு தெரியட்டும்.

Popular posts from this blog

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழம் மரத்தை பற்றி

Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம் . இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவை . இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும். ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் மகிழம் பூ: இதன் பழம் சாப்பிட உகந்தவை . இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர். இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தி...

பூலான் தேவி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பூலான் தேவி ( Phoolan Devi , Aug 10, 1963 - Jul 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரியும் பின்னாளில் அரசியல்வாதியுமாக இவர் அறியப்படுகிறார். பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் ஒடுஇக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன். திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வே...

ஆர்க்டிக் டெர்ன் பறவை

ஆர்க்டிக் டெர்ன்  (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் பறவையாகும். வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களின் வழியே தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் வலசை போகின்றன. வலசை போவதன் மூலம் ஆர்டிக் டெர்ன் சுமார் 35,000 கி. மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் ஆகும். சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவையானது, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வரும் வரை சுமார் 70,900 கி.மீ பயணித்து விடுகிறது. [3] இது உலகில் அறியப்படும் நீண்ட தூரம் வலசை போகும் மற்ற விலங்கினங்களை விட அதிகமான வலசை போகும் தூரமாகும். இப்பறவை ஆர்க்டிக் வட்டமான துந்திராவில் இனப்பெருக்கம் செய்கிறது.