Skip to main content

சுற்றுலா வருபவர்கள் நமது சகோதர–சகோதரிகள்

றைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா எப்போதுமே, சுற்றுலா என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்தும் உந்துசக்தி என்று குறிப்பிடுவார். பிரதமர் நரேந்திரமோடி, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 2 தலைநகரங்களான காஷ்மீரையும், ஸ்ரீநகரையும் இணைக்கும் வகையில் 9.2 கிலோமீட்டர் தூரத்திற்கு, ரூ.2,500 கோடி செலவிலான நாட்டிலேயே மிகப்பெரிய சுரங்கப்பாதையை நேற்று முன்தினம் திறந்துவைத்தார். அப்போது அவர், கடந்த 40 ஆண்டுகளில் சுற்றுலா இந்தப்பகுதியில் மேம்பாடு அடைந்திருந்தால், உலகமே காஷ்மீரின் காலடியில் இருந்திருக்கும். காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க சுற்றுலாவா?, பயங்கரவாதமா? என்பதை முடிவு செய்யவேண்டும். சுற்றுலா வளர, வளர பொருளாதாரம் வளர்ந்துகொண்டேபோகும். அந்தமாநில மக்களும் அதனால் பயனடைந்து கொண்டே இருப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் இந்த கருத்துகளை தெரிவித்த அதேநாளில், சென்னை அருகிலுள்ள மாமல்லபுரத்தில் வெட்கி தலைகுனிய வைக்கும் ஒருசம்பவம் நடந்திருக்கிறது. மாமல்லபுரத்திற்கு ஜெர்மன் நாட்டிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா வந்திருக்கிறார்கள். அதில் 5 பேர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை காலையில் கடற்கரைக்கு சென்றிருக்கிறார்கள். 4 பேர் ‘சன்பாத்’ எடுத்துக்கொண்ட நேரத்தில், ஒருபெண் மட்டும் நான் நடைபயிற்சி செய்கிறேன் என்று கூறிவிட்டு, கடற்கரையில் நடந்துசென்றிருக்கிறார். அப்போது 3 அடையாளம் தெரியாத நபர்கள் அவரை பக்கத்திலுள்ள சவுக்கு தோப்புக்குள் தூக்கிக்கொண்டு போய் அதில் ஒருவன் கற்பழித்திருக்கிறான். அவர்களிடமிருந்து தப்பித்த அந்த பெண் உடனடியாக தூதரகத்துக்கு புகார்செய்ய, இப்போது போலீஸ் விசாரணை நடக்கிறது. ‘‘பெண்களை கடவுளாக மதிக்கும் இந்தியாவில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது மிகவும் துரதிர்ஷ்டமானது’’ என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார். அனைவருக்கும் இது வேதனையளிக்கிறது. ஆக, சுற்றுலா தலங்களில் இன்னும் பாதுகாப்பை மேம்படுத்தவேண்டிய பெரிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே முதல்இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக தமிழ்நாடு இருக்கிறது என்று பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அயல்நாட்டு சுற்றுலா பயணிகளையும் இதேபோல அதிகளவில் ஈர்த்தால், பொருளாதார நிலைமை மேம்படுமே என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இப்படி ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம் நடந்திருக்கிறது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், மலையும் மலைவாழ் சார்ந்த இடங்களும் கொண்ட ‘குறிஞ்சி’ நிலமும், காடும் காடுசார்ந்த இடங்களை கொண்ட ‘முல்லை’ நிலமும், வயலும் வயல்சார்ந்த கொண்ட ‘மருதம்’ நிலமும், கடலும் கடல்சார்ந்த இடமும் கொண்ட ‘நெய்தலும்’, மணலும் மணல்சார்ந்த ‘பாலை’ நிலமும் ஒருங்கே தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. சுற்றுலா என்பது வெறும் பொழுதுபோக்கல்ல, மனங்களில் மகிழ்ச்சி. சுற்றுலா வருமானத்தை மட்டும் பெருக்காமல், பண்பாட்டை பரிமாறவும் பேருதவி புரிகிறது. வேலைவாய்ப்புகளை பெருக்குகிறது. தமிழ்நாட்டுக்கு சுற்றுலாவாக வந்தால் அது விரையம் அல்ல ‘கிரையம்’ என்ற உணர்வுகளை உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடமும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் வளர்க்கவேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. சுற்றுலா தலங்களுக்கு என தனியாக சுற்றுலா போலீஸ் என்ற அமைப்பை அமைக்க அரசு பரிசீலிக்கலாம். சுற்றுலாத்தலங்களில் உள்ள மக்களுக்கு, நம்பகுதிக்கு சுற்றுலா வரும் மக்கள் அனைவரும் நமது சகோதர–சகோதரிகள். இங்கு வந்துவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு, அல்லது சொந்தநாட்டுக்கு திரும்பும்போது, அவர்கள் ஒரு தாய்வீட்டுக்கு, சகோதரன்–சகோதரி வீட்டுக்குவந்த இனிமையான உணர்வோடு திரும்ப வேண்டும் என்பதையே முக்கியக்குறிக்கோளாக தங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

Popular posts from this blog

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழம் மரத்தை பற்றி

Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம் . இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவை . இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும். ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் மகிழம் பூ: இதன் பழம் சாப்பிட உகந்தவை . இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர். இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தி...

பூலான் தேவி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பூலான் தேவி ( Phoolan Devi , Aug 10, 1963 - Jul 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரியும் பின்னாளில் அரசியல்வாதியுமாக இவர் அறியப்படுகிறார். பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் ஒடுஇக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன். திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வே...

ஆர்க்டிக் டெர்ன் பறவை

ஆர்க்டிக் டெர்ன்  (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் பறவையாகும். வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களின் வழியே தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் வலசை போகின்றன. வலசை போவதன் மூலம் ஆர்டிக் டெர்ன் சுமார் 35,000 கி. மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் ஆகும். சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவையானது, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வரும் வரை சுமார் 70,900 கி.மீ பயணித்து விடுகிறது. [3] இது உலகில் அறியப்படும் நீண்ட தூரம் வலசை போகும் மற்ற விலங்கினங்களை விட அதிகமான வலசை போகும் தூரமாகும். இப்பறவை ஆர்க்டிக் வட்டமான துந்திராவில் இனப்பெருக்கம் செய்கிறது.