டெல்லியில் 207 அடி உயர கொடிக்கம்பத்தில் மிகப்பெரிய தேசியக் கொடியை, கொடி அறக்கட்டளை நிறுவனர் நவீன் ஜிண்டால் இன்று ஏற்றி வைத்தார்.
நினைவுச்சின்ன கொடிக்கம்பங்கள் அமைக்கும் முறையை கடந்த 2009ல் கொடி அறக்கட்டளை நிறுவனர் நவீன் ஜிண்டால் அறிமுகப்படுத்தினார். 2009-ம் ஆண்டு டிசம்பர் 23ல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கொள்கை முடிவுக்கு பிறகு தேசியக் கொடியை 100 அடிக்கும் மேலான கம்பத்தில் நாள் முழுவதும் பறக்க விட அனுமதி தரப்பட்டது. இதையடுத்து மிகப்பெரிய கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.