சீனாவின் வடபகுதியில் 2016-2020ம் ஐந்தாண்டு கால திட்டத்தில், கடலுக்கு அடியில் 123 கிமீ நீளம் கொண்ட ரயில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த ரயில் பாதையில், முழுமையாக சரக்குகள் ஏற்றப்பட்ட ஒரு ரயில், மணிக்கு 220 கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்பது விசேஷம். இது மட்டுமின்றி, சீனாவில் எங்கு பார்த்தாலும் பாலங்கள், தொழிற்சாலைகள், கட்டிடங்கள் என்று விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டில் உள்கட்டமைப்பு பணிகளுக்காக 16,800 கோடி அமெரிக்க டாலர்களை சீனா ஒதுக்கியுள்ளது. சீனாவில் இன்னும் 15 ஆண்டில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், அப்போது அங்கு உற்பத்தி குறையலாம் என்றும் வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், எந்த தொழிலை எடுத்து கொண்டாலும் அதில் முதலிடத்தை பிடிக்கும் வகையில், அரசே தேவையான முயற்சிகளை சீனாவில் எடுத்து வருகிறது. அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7.7 சதவீதம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, இன்னமும் 5 சதவீதத்தை ஒட்டியே உள்ளது.
சீன பொருட்கள் இந்தியாவில் வந்து குவிவதால், இந்திய வர்த்தகர்களின் வாய்ப்புகள் பாதிக்கப்படுகிறது என்று சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இரும்பு தாது முதல் பல்வேறு கச்சா பொருட்களை இந்தியாவில் இருந்து வாங்கிக் கொண்டு சென்று, அதை உற்பத்தி பொருட்களாக மீண்டும் மாற்றி, இந்தியாவுக்கே அனுப்பி விற்கிறது சீனா. டாடா நிறுவனத்திடம் கார் உதிரி பாகங்களை தயாரித்து, அதை பல மடங்கு லாபத்துடன், இந்தியாவிலேயே விற்கிறது ஜிஎம் கார் கம்பெனி. திருப்பூர் பனியன்கள், டிசர்ட்கள், பிராண்ட் பெயருடன் அமெரிக்காவில் இருந்து வந்தால் அதிக காசு கொடுத்து வாங்குவதும் இங்குதான்.
குறைந்த விலை, தரமான பொருட்கள் என்ற மந்திரத்தை மட்டும் வைத்து கொண்டு வியாபாரிகள் செயல்பட்டால், எல்லா கடை வீதிகளும் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருக்களாக மாறும் என்பதில் ஐயமில்லை. அதேசமயம், உற்பத்தி பொருட்களை, விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு தேவையான வசதிகளை, சந்தை வாய்ப்புகளையும் வியாபாரிகளுக்கு ஏற்படுத்தி தரவேண்டியது அரசின் கடமை. வரி ஒன்றை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், இதையும் செய்யும்போது, தானாகவே அரசின் வருவாய் உயர்வதோடு, நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்படும்.
டாடாக்களையும், பிர்லாக்களையும் வளர்த்து விடுவதுடன், மூர்மார்க்கெட் வியாபாரிகளும் ஆலைகளை தொடங்கும் அளவுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தால்தான் சீனாவில் இருந்து இறக்குமதியாவது நின்று, இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாவது அதிகரிக்கும்.
ஆனால், எந்த தொழிலை எடுத்து கொண்டாலும் அதில் முதலிடத்தை பிடிக்கும் வகையில், அரசே தேவையான முயற்சிகளை சீனாவில் எடுத்து வருகிறது. அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7.7 சதவீதம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, இன்னமும் 5 சதவீதத்தை ஒட்டியே உள்ளது.
சீன பொருட்கள் இந்தியாவில் வந்து குவிவதால், இந்திய வர்த்தகர்களின் வாய்ப்புகள் பாதிக்கப்படுகிறது என்று சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இரும்பு தாது முதல் பல்வேறு கச்சா பொருட்களை இந்தியாவில் இருந்து வாங்கிக் கொண்டு சென்று, அதை உற்பத்தி பொருட்களாக மீண்டும் மாற்றி, இந்தியாவுக்கே அனுப்பி விற்கிறது சீனா. டாடா நிறுவனத்திடம் கார் உதிரி பாகங்களை தயாரித்து, அதை பல மடங்கு லாபத்துடன், இந்தியாவிலேயே விற்கிறது ஜிஎம் கார் கம்பெனி. திருப்பூர் பனியன்கள், டிசர்ட்கள், பிராண்ட் பெயருடன் அமெரிக்காவில் இருந்து வந்தால் அதிக காசு கொடுத்து வாங்குவதும் இங்குதான்.
குறைந்த விலை, தரமான பொருட்கள் என்ற மந்திரத்தை மட்டும் வைத்து கொண்டு வியாபாரிகள் செயல்பட்டால், எல்லா கடை வீதிகளும் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருக்களாக மாறும் என்பதில் ஐயமில்லை. அதேசமயம், உற்பத்தி பொருட்களை, விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு தேவையான வசதிகளை, சந்தை வாய்ப்புகளையும் வியாபாரிகளுக்கு ஏற்படுத்தி தரவேண்டியது அரசின் கடமை. வரி ஒன்றை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், இதையும் செய்யும்போது, தானாகவே அரசின் வருவாய் உயர்வதோடு, நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்படும்.
டாடாக்களையும், பிர்லாக்களையும் வளர்த்து விடுவதுடன், மூர்மார்க்கெட் வியாபாரிகளும் ஆலைகளை தொடங்கும் அளவுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தால்தான் சீனாவில் இருந்து இறக்குமதியாவது நின்று, இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாவது அதிகரிக்கும்.
