Skip to main content

சுற்றுச்சூழல் ஆய்வாளர், பத்ம ஸ்ரீ விருதால் உலகை திரும்பி பார்க்க வைத்த எளிய மூதாட்டி துளசி கவுடா

மத்திய அரசு சார்பில் 2020ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் 73 பேருக்கு விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார். இவர்களில் செருப்பு கூட அணியாமல் வெறும் கால்களால் நடந்து வந்து, மிகவும் எளிய உடையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் துளசி கவுடா. விருது பெறுவதற்கு முன்பு பிரதமர் மோடிக்கு இவர் வணக்கம் சொன்ன புகைப்படம் இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது. இதையடுத்து துளசி கவுடாவின் கரங்களை பிடித்துக் கொண்டு பிரதமர் மோடி நெகிழ்ச்சியோடு பாராட்டு தெரிவித்தார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றை பெறும் போது கூட, தனக்கே உரிய எளிமையான முறையில் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் துளசி கவுடா. இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டதை பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கொண்டாடி வருகின்றனர். இவர் பற்றிய தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. பலரும் துளசி கவுடா பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.


’காடுகளின் என்சைக்லோபீடியா’, ’மரங்களின் தெய்வம்’ என்றெல்லாம் புகழப்படுபவர் துளசி கவுடா. இவர் கர்நாடக மாநிலம் ஹோனள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர். ஏழை பழங்குடியின குடும்பத்தில் பிறந்தவர். தனது இரண்டு வயதில் தந்தையை பறிகொடுத்தவர். குடும்பத்தை காப்பாற்ற தாயாருடன் சேர்ந்து தினக்கூலி வேலைக்கு சென்று வந்தார். இதனால் முறையான கல்வி கற்க முடியவில்லை. சிறு வயதிலேயே இவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் உடல்நலக் குறைவால் கணவர் இள வயதிலேயே காலமானார்.


இவ்வாறு வாழ்க்கையில் பல்வேறு துயரங்களை அனுபவித்துள்ளார். இந்த சூழலில் இயற்கை மீது ஆர்வம் காட்டத் தொடங்கினார். மரக் கன்றுகளை நடுவதில் ஆர்வம் ஒட்டிக் கொள்ள அதையே தனது முழுநேர பணியாக செய்ய துவங்கினார். உலகின் பல்வேறு ரக மரங்களை கர்நாடக மாநிலத்தின் ஏராளமான இடங்களில் நட்டுள்ளார். தாமாக முன்வந்து வனச்சரகங்கள் உடன் இணைந்து மரங்களை நடும் பணியில் ஈடுபட்டார். இவரது அளப்பரிய பணியை பாராட்டி நிரந்தர பணியை கர்நாடக மாநில அரசு அளித்தது.




எங்கு காடுகள் அழிக்கப்பட்டாலும் தனது எதிர்ப்பு குரலை வலுவாக கொடுத்துள்ளார். மரங்கள் நடுவது மட்டுமின்றி பாரம்பரிய விதைகளையும் பாதுகாத்து வருகிறார். 30 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு ஒரு காட்டையே உருவாக்கி பராமரித்து கொண்டிருக்கிறார். 60 ஆண்டுகளாக மரங்களை, வனங்களை பராமரிக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தற்போது 72 வயதான போதிலும் சுற்றுச்சூழல் மீதான ஆர்வம் குறையாமல் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இவரது பணி மேலும் சிறக்கட்டும். இன்னும் பல ஆண்டுகள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Popular posts from this blog

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழம் மரத்தை பற்றி

Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம் . இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவை . இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும். ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் மகிழம் பூ: இதன் பழம் சாப்பிட உகந்தவை . இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர். இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தி...

பூலான் தேவி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பூலான் தேவி ( Phoolan Devi , Aug 10, 1963 - Jul 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரியும் பின்னாளில் அரசியல்வாதியுமாக இவர் அறியப்படுகிறார். பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் ஒடுஇக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன். திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வே...

ஆர்க்டிக் டெர்ன் பறவை

ஆர்க்டிக் டெர்ன்  (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் பறவையாகும். வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களின் வழியே தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் வலசை போகின்றன. வலசை போவதன் மூலம் ஆர்டிக் டெர்ன் சுமார் 35,000 கி. மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் ஆகும். சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவையானது, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வரும் வரை சுமார் 70,900 கி.மீ பயணித்து விடுகிறது. [3] இது உலகில் அறியப்படும் நீண்ட தூரம் வலசை போகும் மற்ற விலங்கினங்களை விட அதிகமான வலசை போகும் தூரமாகும். இப்பறவை ஆர்க்டிக் வட்டமான துந்திராவில் இனப்பெருக்கம் செய்கிறது.