Skip to main content

மண்டைக்காடு கலவரம் வரலாறு

மண்டைக்காடு கலவரம் என்பது 1982 ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையே மண்டைக்காடு என்னும் இடத்தை மையமாகக் கொண்டு நடந்த கலவரங்களைக் குறிக்கும். இந்தக் கலவரத்தைப் பற்றி விசாரிக்க நீதியரசர் வேணுகோபால் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

மண்டைக்காடு

மண்டைக்காடு கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள சிற்றூர். இங்கு கிறித்தவர்களும் இந்துக்களும் அருகருகே வாழ்ந்து வருகிறார்கள். மண்டைக்காட்டில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசி கொடை விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இக்கோயிலின் அருகில் புனித கண்ணாம்பாள் ஆலயம் மற்றும் அதன் குருசடி அமைந்துள்ளது.

கலவரத்திற்கான சூழல்

1980 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மாடதட்டுவிளை என்னும் இடத்தில் இரண்டு இளைஞர்களுக்கு இடையே சிறு சண்டை மூண்டது. இதன் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த சிலுவை காணாமல் போணதால் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை உருவானது. 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், உலக செப வாரம் ஒரு வார காலத்திற்கு அனைத்து கிறித்தவர்களாலும் ஒற்றுமையுடன் கொண்டாடப்பட்டது. அதன் இறுதி நாளன்று கிறித்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலுக்கு திங்கள் நகர் வழியாக ஒர் ஊர்வலம் நடத்தினார்கள். அந்த ஊர்வலத்தை வரவேற்கும் விதமாக கிறித்தவ வணிகர் ஒருவர் ஒளிரும் சிலுவை ஒன்றைத் திங்கள் நகரின் மையப்பகுதியில் உள்ள போக்குவரத்து காவலர் நிழற்குடை அமைந்திருக்கும் திடலில் அமைக்கப்பட்டது. அந்த ஊர்வலம் முடிந்த பிறகு அச்சிலுவை அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்து விவசாயி ஒருவர் அவ்விடத்தில் விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலையை அமைத்தார் வழிபாடு நடத்த ஆரம்பித்தார். ஐந்து நாட்கள் கழித்து மகா சிவராத்திரி அன்று காவல்துறையினர் கிறித்தவர்களின் எதிர்ப்பின் காரணமாக சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி விநாயகர் சிலையை அகற்றினர். இந்துக்களின் முக்கிய திருவிழாவன்று இச்சிலை அகற்றப்பட்டதால் இந்துக்கள் இடையே கொந்தளிப்பு எற்பட்டது. இந்துக்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். இதனால் இந்து மக்களிடையே ஒற்றுமையும் எழுச்சியும் ஏற்பட்டது. இந்து கிறித்தவ கலவரம் பக்கத்து ஊர்களிலும் பரவியது. கிறித்தவர்கள் குமரிக் கடலில் இருக்கும் விவேகானந்தர் பாறையில் புனித சவேரியார் தியானம் செய்தார் என்று அதன் உரிமையை நிலைநாட்ட முயன்றனர். ஆவணங்களின் படி அப்பாறை கன்னியாகுமரி கோவிலுக்குச் சொந்தமானது. இரு முறை விவேகானந்தர் நூற்றாண்டு கலவெட்டுகளை அகற்றிவிட்டு சிலுவைகளை அதன் மேல் நட்டனர். இந்துக்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிலுவைகளை அகற்றினர். இதனால் கிறித்தவர்கள் விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் போக்குவரத்தை தடை செய்தனர். இப்படி கிறித்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே வெறுப்புணர்வு வளர்ந்து கொண்டே இருந்தது. இதன் உச்ச கட்டமாக, 1982 பெப்ரவரி 13,14 அன்று நாகர்கோவிலில் இந்துக்கள் ஒன்றினைந்து நடத்திய இந்துக்கள் எழுச்சி மாநாடு கிறித்தவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

கலவரம்

1982 ம் ஆண்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா வழக்கம் போல் தொடங்கியது. விழாவின் முதல் நாள் கிறித்தவர்கள் இந்து பெண்களைhf கேலி செய்கிறார்கள் என்ற வதந்தி பரவியது. ஏற்கனவே வழிபாட்டுக்கு ஒலிகுழல் கட்டுவது தொடர்பாக சர்ச்சை நிலவி வந்தது. இதன் காரணமாக மார்ச் 1, 1982 அன்று மக்கள் மண்டைக்காடு ஆலயத்தின் முன் கூடினர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் காவலர்கள் 46 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆறு பேர் இறந்தனர். கலவரம் கல்லுக்கூட்டம், ஈத்தாமொழி, ராசாக்கமங்கலம், பிள்ளைத்தோப்பு, நாகர்கோவில் முதலிய இடங்களுக்கும் பரவியது. இரண்டு வாரங்கள் கழித்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். கோவளத்தில் நடந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தக் கலவரத்தில் தேவாலயங்கள், கோயில்கள், மருத்துவமனைகள், மற்றும் பொது சொத்துக்கள் அதிகமாக சேதம் அடைந்தன. இக்கலவரத்தால் கடற்கரையிலுள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மீன்பிடி வலைகள் அழிக்கப்பட்டன. அவர்கள் பயன்படுத்திய குடிநீர் கிணறுகளில் டீசல் முதலான நஞ்சு கலக்கப்பட்டது. அவர்களுக்கான உணவுப் பொருட்கள் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டன.

பொன். ராதாகிருஷ்ணன்

1982-ல் நடந்த மண்டைக்காடு கலவரம் கன்னியாகுமரி மாவட்டத்தையே உலுக்கியது. இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு சமைக்க வீடு வீடாகச் சென்று அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேகரித்தார் ராதாகிருஷ்ணன். செல்வந்தர் குடும்பத்து இளைஞன் தெருவில் இறங்கி அரிசி, பருப்பு சேகரிப்பதைக் கண்டு வியந்த ஆயிரக்கணக்கானோர் அவருடன் இணைந்தனர். இந்தச் சம்பவம் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கையை மட்டுமல்ல, கன்னியாகுமரி மாவட்ட அரசியலையும் மாற்றியமைத்தது.

Popular posts from this blog

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழம் மரத்தை பற்றி

Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம் . இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவை . இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும். ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் மகிழம் பூ: இதன் பழம் சாப்பிட உகந்தவை . இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர். இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தி...

பூலான் தேவி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பூலான் தேவி ( Phoolan Devi , Aug 10, 1963 - Jul 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரியும் பின்னாளில் அரசியல்வாதியுமாக இவர் அறியப்படுகிறார். பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் ஒடுஇக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன். திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வே...

ஆர்க்டிக் டெர்ன் பறவை

ஆர்க்டிக் டெர்ன்  (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் பறவையாகும். வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களின் வழியே தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் வலசை போகின்றன. வலசை போவதன் மூலம் ஆர்டிக் டெர்ன் சுமார் 35,000 கி. மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் ஆகும். சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவையானது, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வரும் வரை சுமார் 70,900 கி.மீ பயணித்து விடுகிறது. [3] இது உலகில் அறியப்படும் நீண்ட தூரம் வலசை போகும் மற்ற விலங்கினங்களை விட அதிகமான வலசை போகும் தூரமாகும். இப்பறவை ஆர்க்டிக் வட்டமான துந்திராவில் இனப்பெருக்கம் செய்கிறது.