Skip to main content

பெர்முடா முக்கோணத்தை பற்றிய அதிர்ச்சியான தகவல்கள்




பெர்முடா முக்கோணத்தை பற்றிய அதிர்ச்சியான தகவல்கள்
வட அட்லாண்டிக் கடலின் மேல்பகுதியில் தான் பெர்முடா முக்கோணம் இருக்கின்றது. இதை சாத்தானின் முக்கோணம் என்றும் அமெரிக்க மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதற்கு காரணம், பெர்முடா முக்கோணத்தின் மேல் கடந்த விமானங்களும், அருகே சென்ற கப்பல்களும், படகுகளும் என்ன ஆனது என்றே தெரியாத அளவில் அழிந்துப் போயிருக்கின்றன.
அறிவியலில் உச்சத்தை அடைந்துவிட்டோம், செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான கூறுகளை கண்டறிந்துள்ளோம் என்று மார்தட்டிக் கொள்ளும் அறிஞர்கள் கூட பெர்முடா முக்கோணத்தில் நடக்கும் இந்த வினோத செயல்களை கண்டறிய முடியாமல் தவிக்கின்றனர்.
அப்படி என்ன தான் நடக்கிறது என்று ஆராய்ச்சி கூட செய்ய இயலாத அளவு மிகவும் ஆபத்தானப் பகுதி என்று தடைவிதிக்கப்பட்டு திகழ்கிறது பெர்முடா முக்கோணம். அங்கு நடக்கும் அதிர்ச்சியான தகவல்கள் பற்றி இனிப் பார்க்கலாம்…
திசைக் குழப்பம் 
கப்பல் மற்றும் விமானங்கள் காந்த திசைக் காட்டியின் படிதான் பயணிக்கின்றன. ஆனால், பெர்முடா முக்கோணத்தை கடக்கும் போது காந்த திசைக் காட்டிகள் செயலிழந்துப் போவதாகக் கூறப்படுகிறது. இதுவே, பல விபத்துகளுக்கு காரணமாக இருப்பதாக கருதுகிறார்கள்.
கொலம்பஸ்பெமுடா முக்கோணத்தின் அருகே திசைக் காட்டிகள் செயலிழக்கின்றன என்று முதன் முறையாக கண்டறிந்து கூறியவர் கொலம்பஸ். மற்றும் அப்பகுதியில் வானத்தில் ஓர் எரிப்பந்தை கண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
போர் விமானங்கள் மறைந்து போயின…
1945 ஆம் ஆண்டு குண்டுகள் தாங்கிய அமெரிக்க போர் விமானங்கள், தாக்குதலுக்காக ஃபோர்ட் லாடர்டல் எனும் பகுதியில் இருந்து பயணத்தை துவக்கி இருக்கின்றனர். கடைசியாக அவர்களிடம் இருந்து திசைக் காட்டி வேலை செய்யவில்லை என்ற தகவல் மட்டுமே வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின் மீட்க சென்ற விமானங்களும் மறைந்து போய்விட்டன. இதனால், அமெரிக்கா போரில் பெரும் தோல்வி அடைந்தது.
ஆயிரம் உயிர்கள்…
கடந்த நூற்றாண்டில் மட்டும் பெர்முடா முக்கோணம் ஆயிரம் உயிர்களை பலி வாங்கியுள்ளது.
ஒவ்வொரு வருடமும்…
ஒவ்வொரு வருடமும் சுமார் நான்கு விமானங்களும், ஏறத்தாழ 20 பந்தைய படகுகளும் பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போகின்றன.
மர்மம் இதுவரை பெர்முடா முக்கோணம் பகுதியில் காணமால் போன எந்த ஒரு விமானமோ, படகோ, கப்பல்களோ இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு தடயம் கூட கிடைக்கவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
புரளி
இது ஏலியன்களின் செயல் என்று கடந்த நூற்றாண்டில் பரவலாக புரளி பேசப்பட்டிருக்கின்றது. அட்லாண்டிஸ் நகரம் அட்லாண்டிஸ் நகரம் கடலினுள் அழிந்து போனதற்கு பெர்முடா முக்கோணமும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
வியப்பு
பெர்முடா முக்கோணம் வெளியில் இருந்து பார்க்கும் போது மிகவும் அமைதியான இடமாக தான் காட்சி அளிக்கின்றது. ஆயினும் அதன் அருகில் சென்றால் அனைத்து பொருள்களும் மாயமாகிவிடுவது தான் வியப்பாக இருக்கின்றது.
பரப்பளவு
பெர்முடா முக்கோணத்தின் பரப்பளவு 4,40,000 மைல் ஆகும். நமது நாட்டோடு ஒப்பிடுகையில் ராஜஸ்தான், மகாராஸ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை ஒன்றிணைத்தால் கூட, அதனை விட பெரியதாக இருக்கும் பெர்முடா முக்கோணம்.


Popular posts from this blog

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழம் மரத்தை பற்றி

Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம் . இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவை . இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும். ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் மகிழம் பூ: இதன் பழம் சாப்பிட உகந்தவை . இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர். இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தி...

பூலான் தேவி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பூலான் தேவி ( Phoolan Devi , Aug 10, 1963 - Jul 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரியும் பின்னாளில் அரசியல்வாதியுமாக இவர் அறியப்படுகிறார். பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் ஒடுஇக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன். திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வே...

ஆர்க்டிக் டெர்ன் பறவை

ஆர்க்டிக் டெர்ன்  (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் பறவையாகும். வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களின் வழியே தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் வலசை போகின்றன. வலசை போவதன் மூலம் ஆர்டிக் டெர்ன் சுமார் 35,000 கி. மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் ஆகும். சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவையானது, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வரும் வரை சுமார் 70,900 கி.மீ பயணித்து விடுகிறது. [3] இது உலகில் அறியப்படும் நீண்ட தூரம் வலசை போகும் மற்ற விலங்கினங்களை விட அதிகமான வலசை போகும் தூரமாகும். இப்பறவை ஆர்க்டிக் வட்டமான துந்திராவில் இனப்பெருக்கம் செய்கிறது.