Skip to main content

Posts

இன்று நூற்றாண்டு காணும் பாம்பன் ரெயில் பாலம் உருவான வரலாறு

                                                சென்னை: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் தீவு வழியாக பல நூற்றாண்டு காலமாக வர்த்தக தொடர்பு இருந்து வந்தது. தமிழ்நாட்டில்  இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தேயிலை தோட்ட வேலைக்காக இலங்கைக்கு சென்று வந்தனர். தமிழ் நாட்டில் இருந்து சிலவகை பொருட்களை கொண்டு சென்று கொழும்பு நகரில் விற்பனை செய்த தமிழக வணிகர்கள் அங்கிருந்து தேயிலை போன்ற பொருட்களை இங்கு கொண்டு வந்து வியாபாரம் செய்து வந்தனர்.   அவர்கள் மண்டபத்தில் இருந்து படகுகள் மூலம் பாம்பன் வழியாக தனுஷ்கோடி துறைமுகம் சென்று அங்கிருந்து கப்பலில் இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கு சென்று வந்தனர். பயணிகள் வசதிக்காக மண்டபத்துக்கும், தனுஷ்கோடி துறைமுகத்துக்கும் இடையே (பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக) 1876-ம் ஆண்டு பாம்பன் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.    இந்த பாலத்தின் வழியாக 1914-ல் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த ர...

3 ஜெட் என்ஜின்களுடன் மணிக்கு 643 கிலோ மீட்டர் வேகத்தில் பாயும் அதிநவீன லாரி

                                            ஒட்டாவா :  கனடாவின் ஓண்டாரியோ நகரில் நவீன வாகனங்களுக்கான கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பங்கேற்ற அதிநவீன லாரி பார்வையாளர்களின் கண்களை மட்டுமின்றி கருத்தையும் கவர்ந்திழுத்தது.  இந்த லாரியின் உரிமையாளரான நியெல் டார்னெல் என்பவர் 1957-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘செவெர்லெட்’ லாரியின் வடிவமைப்பை மாற்றி, அதில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான 3 பழைய ஜெட் விமான என்ஜின்களை பொருத்தி, ஒரு மணி நேரத்தில் 643  கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் அசுர வாகனமாக மாற்றியுள்ளார்.  இன்றைய சாலைகளில் ஓடும் கனரக லாரி என்ஜின்களின் அதிகபட்ச குதிரை இழுவைத் திறன் (ஹார்ஸ் பவர்) 400 ஹெச்.பி.க்கும் குறைவாகவே உள்ள நிலையில், நியெல் டார்னெல் உருவாக்கியுள்ள இந்த அதிநவீன லாரியின் இழுவைத் திறன் 36 ஆயிரம் ஹெச்.பி. என்று மதிடப்பிடப்பட்டுள்ளது.  இந்த திறனுடன் ஆறரை வினாடியில் கால் மைல் தூரத்தை கடந்து ’ஷாக்வேவ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த லாரி பு...

நாமும் முன்னேறுவோம்

சீனாவின் வடபகுதியில் 2016-2020ம் ஐந்தாண்டு கால திட்டத்தில், கடலுக்கு அடியில் 123 கிமீ நீளம் கொண்ட ரயில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த ரயில் பாதையில், முழுமையாக சரக்குகள் ஏற்றப்பட்ட ஒரு ரயில், மணிக்கு 220 கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்பது விசேஷம். இது மட்டுமின்றி, சீனாவில் எங்கு பார்த்தாலும் பாலங்கள், தொழிற்சாலைகள், கட்டிடங்கள் என்று விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டில் உள்கட்டமைப்பு பணிகளுக்காக 16,800 கோடி அமெரிக்க டாலர்களை சீனா ஒதுக்கியுள்ளது. சீனாவில் இன்னும் 15 ஆண்டில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், அப்போது அங்கு உற்பத்தி குறையலாம் என்றும் வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், எந்த தொழிலை எடுத்து கொண்டாலும் அதில் முதலிடத்தை பிடிக்கும் வகையில், அரசே தேவையான முயற்சிகளை சீனாவில் எடுத்து வருகிறது. அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7.7 சதவீதம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, இன்னமும் 5 சதவீதத்தை ஒட்டியே உள்ளது. சீன பொருட்கள் ...

டூத் பேஸ்ட்-டில் உள்ள கெமிக்கல் குழந்தைகளின் மூளையை பாதிக்கும்

பாரிஸ்: டூத் பேஸ்ட் உள்பட பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள், குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹார்வர்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் பிலிப்பி கிரேண்ட்ஜீன், கேன் ஸ்கூல் ஆப் மெடிசின் கல்லூரியில் பணிபுரியும் ஆய்வாளர் பிலிப் லாண்ட்ரிகன் ஆகியோர், நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். தங்களது ஆய்வில் தெரிய வந்த உண்மைகள் குறித்து இருவரும் கூறியதாவது:குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் ரசாயன பொருட்களின் எண்ணிக்கை கடந்த 2006ம் ஆண்டு 6 ஆக இருந்தது. இப்போது 12 ஆகியுள்ளது. டூத் பேஸ்ட்டில் உள்ள புளோரிட் உள்பட பல்வேறு ரசாயன பொருட்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன. கடந்த 2006ம் ஆண்டு எத்தனால், லெட், மெத்தில்மெர்க்குரி, பைபெனில்ஸ், ஆர்செனிக் மற்றும் டோலின் ஆகிய ரசாயன பொருட்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிப்பதாக கண்டறியப்பட்டன. இப்போது மெக்னீசியம், புளோரிட், குளோர்பைரிபோஸ், டெட்ராகுளோரோ எத்திலீன் உள்பட ம...

இரத்தத்தை சுத்தம் செய்யும் கோவைக்காய்

கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.  இரத்தம் சுத்தமடைய: காற்று, நீர், இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவு (பாஸ்ட்புட்)களாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது. இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும். கண் நோய் குணமாக: கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்...

சிதம்பர ரகசியம்

சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று வடிவங்களில் வீற்றிருக்கிறார். இம்மூன்று விதங்களிலும் ஒருசேர அருள்பாலிக்கும் தலம் சிதம்பரம். இங்கு லிங்கரூபமாக இருக்கும் திருமூலநாதர் அருவுருவ வடிவமாவார். நடராஜரின் திருமேனி உருவ வடிவமாகும். சிதம்பர ரகசியமாக இருக்கும் வெட்டவெளி சிவனின் அருவவடிவமாகும். நடராஜரின் வலப்பக்கத்தில் ஒரு சிறுவாசல் உள்ளது. அதை திரையால் மூடி இருப்பர். பூஜையின் போது அத்திரையை அகற்றி கற்பூர ஆரத்தி காட்டுவர்.  அப்போது இறைவனின் திருவுருவம் எதையும் காண முடியாது. ஆகாய ரூபமாக இறைவன் இருப்பதை இவ்வழிபாடு காட்டுகிறது. இறைவன் ஆகாயம் போல் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது.  இறைவனும் முதலும் முடிவும் இல்லாதவன் என்பதை இது காட்டுகிறது. தங்கத்தால் செய்யப்பட்ட வில்வமாலை ஒன்றை மட்டும் அவ்விடத்தில் காணலாம். இதையே சிதம்பர ரகசியம் என்பர்.

இன்றும் கூட தெருவில் பணம் கிடந்தால் குனிந்து எடுக்க தயங்க மாட்டேன்: உலக கோடீஸ்வரர் பில் கேட்ஸ் விளக்கம்

நியூயார்க் : உலகின் பெரும் செல்வந்தராக கருதப்படும் மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்சின் ஒட்டு மொத்த வர்த்தக முதலீடு 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் அவருக்கு வட்டியாக மட்டும் ஒவ்வொரு வினாடியும் 114.16 டாலர்கள் கிடைத்து வருவதால் அவரது முதலீடு ஒவ்வொரு வினாடியும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் வாயிலாக வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபமும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து பெருகிக் கொண்டே போகிறது. வருமானத்தின் பெரும்பகுதியை உலக நாடுகளின் போலியோ ஒழிப்பு, எய்ட்ஸ் நோய்க்கு எதிரான பிரசாரம் போன்றவற்றுக்காக செலவிட்டு வரும் அவர் இன்றும் கூட அன்றாடம் தான் சாப்பிட்ட தட்டுகளை இரவு வேளைகளில் தானே சுத்தம் செய்து வைப்பதில் மனநிறைவு கொள்கிறார். இந்நிலையில், அமெரிக்க அரசின் உளவு பார்க்கும் நடவடிக்கை, கேட்ஸ் அறக்கட்டளையின் தொண்டுகள், மற்றும் தனது தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் தொடர்பாக சமூக வலைத்தளத்தின் வாயிலாக நேற்று ‘ஆன் லைன்’ மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் சரமாரியாக பதில்களை அள்ளி வீசினார். இவற்றில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த பில் கேட்ஸ், ‘இன்றும் கூட தெருவி...