Skip to main content

18 dead in multiple collisions in Krishnagiri (கிருஷ்ணகிரி அருகே கோர விபத்து)

The mangled remains of the bus, lorry and car involved in a multiple collision that killed 15 persons and injured several others in Melumalai in Krishnagiri district Tamilnadu on Friday. Photo: N.Bashkaran

A Krishnagiri-bound private bus carrying 33 passengers from Berigai was rammed by a groundnut-laden lorry from Karnataka.


 Sixteen people including six women and a 12-year-old child were killed in a multiple collisions involving a bus, a lorry and a car here in Melumalai in Krishnagiri.
A Krishnagiri-bound private bus carrying 33 passengers from Berigai was rammed by a groundnut-laden lorry from Karnataka.
Around 30 people are said to have been injured.
According to preliminary information, the lorry had breached the NH median and crashed into the passenger bus and a car. The bus was carrying 10 women and 22 men.
The death toll is expected to increase
ருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி, தனியார் பேருந்து மீது மோதிய விபத்தில் 17 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 30 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் மாலூருக்கு நேற்று பிற்பகல் தனியார் பேருந்து 42 பயணிகளு டன் சென்றுகொண்டு இருந்தது. கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ் சாலையில் குருபரப்பள்ளி அடுத்து மேலுமலை அருகே சென்றபோது, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி நிலக்கடலை பாரம் ஏற்றிய லாரி ஒன்று எதிரே வந்துகொண்டிருந்தது. மேலுமலை அருகே, தாழ்வான பகுதியில் லாரி வந்தபோது ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.
சாலையின் நடுவே உள்ள தடுப்புக் கம்பிகளை உடைத்துக் கொண்டு, எதிர் பாதைக்கு லாரி சென்றது. அப்போது, ஓசூர் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதி யது. இதில் தனியார் பேருந் தின் முன்பகுதி முற்றிலும் உருக் குலைந்தது.
தனியார் பேருந்தை பின் தொடர்ந்து வந்த 2 கார்கள், பேருந்து மீது அடுத்தடுத்து மோதின. அப்போது, ஒரு காரின் மீது பேருந்து சாய்ந்தது. இந்த விபத்தில், பேருந்தில் வந்த பயணிகளில் 9 பேர் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர். இடிபாடு களுக்குள் சிக்கியிருந்த 33 பயணி களை, கிருஷ்ணகிரி தீயணைப்பு வீரர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஓசூர் ஏஎஸ்பி ரோகிணி பிரியதர்ஷிணி, கிருஷ்ண கிரி டிஎஸ்பி கண்ணன் மற்றும் போலீஸார் மீட்புப் பணியை துரிதப்படுத்தினர்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்ட 33 பயணிகளில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒருவர், வழியிலேயே உயிரிழந்தார். விபத்தில் 10 ஆண் கள், 12 வயது சிறுமி உட்பட 7 பெண்கள் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் கதிரவன், சேலம் சரக போலீஸ் டிஐஜி நாகராஜன், கிருஷ்ணகிரி எஸ்பி (பொறுப்பு) பண்டி கங்காதர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணி களை துரிதப்படுத்தினர்.
இந்த விபத்து காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டு, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. விபத்து குறித்து சூளகிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் விவரம்
சேலம் மாவட்டம் தாரமங்கலத் தைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி அண்ணாமலை மனைவி அஞ்சலா (30), ஓசூர் அலசநத்தத்தைச் சேர்ந்த முனிராஜ் மகன் பிளஸ் 2 மாணவர் கணேசன் (17), பர்கூர் அருகே உள்ள தேசப்பள்ளியைச் சேர்ந்த கவுரம்மா (55), தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளிகள் மாதம்மா (40), நிர்மலா(38), பொம்மிடி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன்(40) ஆகிய 6 பேரின் விவரங்கள் தெரியவந்துள்ளன.
முதல் இயக்கத்திலேயே விபத்து
கிருஷ்ணகிரி - ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் மாலூர் வரை இயக்க ‘பர்மிட்’ பெறப்பட்டுள்ள விபத்துக்குள்ளான பேருந்து, இந்த தடத்தில் 12 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. ஓசூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பர்மிட் வாங்கி இருந்தார். நேற்று மதியம் 1.45 மணியளவில்தான் பேருந்து முதல் இயக்கத்தை தொடங்கியது. பேருந்து இயக்கம் தொடங்கிய 20 நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
நிவாரண உதவி
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பெங்களூருவில் இருந்து வந்த லாரி, எதிர் திசையில் வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், நொறுங்கிய பேருந்து பின்தொடர்ந்து வந்த கார் மீது சாய்ந்தது.
விபத்து நேரிட்டது எப்படி?
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர்புறத்தில் கிருஷ்ணகிரி நோக்கி கடலை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
குருபரபள்ளி அடுத்த மேடுமலை பகுதியில் வாகனங்கள் வந்து கொண்டிருந்தபோது லாரி அதிவேகமாக வந்துள்ளது. சில நிமிடங்களில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய லாரி சென்டர் மீடியனைத் தாண்டி எதிரே வந்து பஸ் மீது பாய்ந்தது.
இந்த விபத்தில் ஒரு காரும் சிக்கிக் கொண்டது. வாகனங்கள் பலமாக மோதிக் கொண்டதில் 12 பேர் உயிரிழந்தது முதற்கட்ட தகவலில் உறுதி செய்யப்பட்டது.
காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.



Popular posts from this blog

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழம் மரத்தை பற்றி

Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம் . இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவை . இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும். ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் மகிழம் பூ: இதன் பழம் சாப்பிட உகந்தவை . இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர். இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தி...

பூலான் தேவி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பூலான் தேவி ( Phoolan Devi , Aug 10, 1963 - Jul 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரியும் பின்னாளில் அரசியல்வாதியுமாக இவர் அறியப்படுகிறார். பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் ஒடுஇக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன். திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வே...

ஆர்க்டிக் டெர்ன் பறவை

ஆர்க்டிக் டெர்ன்  (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் பறவையாகும். வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களின் வழியே தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் வலசை போகின்றன. வலசை போவதன் மூலம் ஆர்டிக் டெர்ன் சுமார் 35,000 கி. மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் ஆகும். சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவையானது, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வரும் வரை சுமார் 70,900 கி.மீ பயணித்து விடுகிறது. [3] இது உலகில் அறியப்படும் நீண்ட தூரம் வலசை போகும் மற்ற விலங்கினங்களை விட அதிகமான வலசை போகும் தூரமாகும். இப்பறவை ஆர்க்டிக் வட்டமான துந்திராவில் இனப்பெருக்கம் செய்கிறது.