Skip to main content

சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்தது: பெண் பலி

                                      சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்தது: பெண் பலி


சென்னை, மே. 1

சென்னை நகருக்கு தீவிர வாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறையினர் கடந்த சில ஆண்டுகளாக எச்சரித்து வந்தனர். இதையடுத்து தமிழக போலீசாரின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகள் கைவரிசை காட்ட முடியாமல் இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் – இ– தொய்பா தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் தற்கொலை படையினரை இலங்கை வழியாக தமிழ்நாட்டுக்குள் ஊடுருவ வைக்க திட்டமிட்டு முயற்சிகளில் ஈடுபட்டனர். 

இதை கண்டுபிடித்த உளவுத்துறை தமிழக போலீசாரை உஷார்படுத்தினார்கள். அதன்பேரில் நடந்த சோதனையில் நேற்று முன் தினம் இரவு திருவல்லிக் கேணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளி முகம்மது ஜாகீர்உசேன் என்பவன் பிடிபட்டான். அவன் சென்னையில் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இதனால் சென்னையில் நேற்று முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. 

தீவிரவாதிகள் சென்னையில் ஊடுருவ தொடங்கி இருக்கும் தகவலால் ஏற்பட்ட அந்த அதிர்ச்சி நீங்கு வதற்குள் இன்று (வியாழக்கிழமை) காலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்தன. கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெங்களூரில் புறப்பட்டு சென்னை வழியாக வட கிழக்கு மாநிலமான அசாம் மாநில தலைநகர் கவுகாத்திக்கு செல்லும் ரெயிலாகும். 

பெங்களூரில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் அந்த ரெயில் சென்னைக்கு அதிகாலை 5.40 மணிக்கு வந்து சேரும். சென்னையில் சுமார் 40 நிமிடங்கள் நிற்கும் இந்த ரெயில் பயணிகளை இறக்கி – ஏற்றி விட்டு காலை 6.20 மணிக்கு புறப்படும். சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இந்த ரெயிலில் சென்னையில் இருந்து தினமும் ஆயிரக் கணக்கானவர் செல்வதுண்டு. இன்று கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 1½ மணி நேரம் தாமதமாக காலை 7.05 மணிக்குத்தான் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் 9–வது பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தது. இதனால் ரெயிலை சீக்கிரம் எடுத்து விடுவார்கள் என்ற நிலையில் நூற்றுக்கணக்கான பயணிகள் அவசரம், அவசரமாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தனர். 

அடுத்த 10–வது நிமிடம் அதாவது 7.15 மணியளவில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன்பதிவு பெட்டியான எஸ்–4 பெட்டியில் பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. அடுத்த வினாடியே அருகில் உள்ள எஸ்–5 முன்பதிவு பெட்டியிலும் பயங்கர சத்தத்துடன் மற்றொரு குண்டு வெடித்தது. அடுத்தடுத்து வெடித்த இரு குண்டுகளும் பயணிகள் அமரும் இருக்கைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்ததாகும். இதனால் எஸ்–4, எஸ்–5 இரு பெட்டிகளிலும் ஒரு பகுதி நொறுங்கியது. இருக்கைகள், கண்ணாடிகள் சிதறின. இதில் சிக்கிக் கொண்ட பயணிகள் அலறினார்கள். 

உயிர் பிழைக்க சிதறி ஓடினார்கள். இதையடுத்து அருகில் இருந்த மற்ற பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். குண்டுகள் வெடிக்கின்றன என்ற தகவல் பரவியதும் உடமைகளை கூட எடுக்காமல் பயணிகள் அலறி யடித்தப்படி ரெயிலில் இருந்து இறங்கினார்கள். இதனால் 9–வது பிளாட்பாரத்தில் பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. இதற்கிடையே குண்டுகள் வெடித்த தகவல் அறிந்ததும் சென்ட்ரல் ரெயில்வே போலீசார் 9–வது பிளாட் பாரத்துக்கு விரைந்தனர். குண்டுகள் வெடித்த இரண்டு பெட்டிகளிலும் ஏறி பார்த்தபோது சுமார் 14 பேர் காயங்களுடன் கிடப்பது தெரிந்தது. 

அவர்களை மீட்டு ரெயில் பெட்டிகளில் இருந்து கீழே இறக்கினார்கள். அப்போது எஸ்–4 பெட்டிக்குள் ஒரு இளம்பெண் குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி இருப்பது தெரிந்தது. போலீசார் அவர் உடலை அகற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான அந்த பெண்ணின் சுவாதி என்றும் 22 வயதானவர் என்றும் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. 

காயம் அடைந்த 14 பயணிகள் அருகில் உள்ள அரசு ராஜீவ்காந்தி பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்த பயணிகளில் 3 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசாரும், தமிழக போலீசாரும் சுமார் 500 பேர் குவிக்கப்பட்டனர். அவர்கள் முதல் கட்டமாக கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் அனைத்து பெட்டிகளிலும் ஏறி சோதனை நடத்தினார்கள். தீவிரவாதிகள் வேறு ஏதாவது குண்டுகள் வைத்துள்ளார்களா? என்று அதிரடி சோதனை நடத்தினார்கள். 

சென்ட்ரலில் இருந்து மற்ற நகரங்களுக்கு புறப்பட்டு செல்லும் ரெயில் சேவைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன. அந்த ரெயில்களின் பெட்டிகளிலும் போலீசார் சோதனையிட்டனர். அதில் வேறு எங்கும் குண்டுகள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதுபோல சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் நோக்கி வந்த மற்ற ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அவற்றிலும் குண்டுகள் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பிறகு 9.30 மணிக்குப் பிறகு ரெயில் சேவை தொடங்க ஆரம்பித்தது. குண்டு வெடித்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் எஸ்–4, எஸ்–5 பெட்டிகளை மட்டும் விட்டு, விட்டு 10.45 மணிக்கு புறப்பட்டு சென்றது. கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைத்தது யார்? என்று தெரியவில்லை. 

எந்த தீவிரவாத இயக்கமும் இதற்கு பொறுப்பு ஏற்க வில்லை. சென்னையில் நேற்று முன்தினம் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனின் கூட்டாளிகள் இந்த குண்டு வெடிப்புகளை நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன

Popular posts from this blog

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழம் மரத்தை பற்றி

Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம் . இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவை . இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும். ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் மகிழம் பூ: இதன் பழம் சாப்பிட உகந்தவை . இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர். இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தி...

பூலான் தேவி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பூலான் தேவி ( Phoolan Devi , Aug 10, 1963 - Jul 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரியும் பின்னாளில் அரசியல்வாதியுமாக இவர் அறியப்படுகிறார். பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் ஒடுஇக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன். திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வே...

ஆர்க்டிக் டெர்ன் பறவை

ஆர்க்டிக் டெர்ன்  (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் பறவையாகும். வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களின் வழியே தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் வலசை போகின்றன. வலசை போவதன் மூலம் ஆர்டிக் டெர்ன் சுமார் 35,000 கி. மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் ஆகும். சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவையானது, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வரும் வரை சுமார் 70,900 கி.மீ பயணித்து விடுகிறது. [3] இது உலகில் அறியப்படும் நீண்ட தூரம் வலசை போகும் மற்ற விலங்கினங்களை விட அதிகமான வலசை போகும் தூரமாகும். இப்பறவை ஆர்க்டிக் வட்டமான துந்திராவில் இனப்பெருக்கம் செய்கிறது.