வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தாலே தலைவலி நீங்கிவிடும். அல்லது வெங்காயத்தை பாதியாக அறுத்து நெற்றில் தேய்த் தாலும் தலைவலி குறையும். உள்ளங்கையில் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக அந்த இடத்தில் நெய்யை தடவினால் எரிச்சல் அடங்கிவிடும். சீழ் பிடிக்காது. புளி ஏப்பம் நிற்க சமஅளவு சீரகமும், உப்பும் சேர்த்து வாயில் போட்டு மென்று தண்ணீர் குடிக்க வேண்டும்.
அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றைக் குறைக்க மிளகு அருமருந்து. மிளகு சாப்பிடுவதால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. அது வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைச் சரிசெய்கிறது. ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது.
அப்போது புளி ஏப்ப பிரச்னை தீர்ந்துவிடும். ஆப்பிள் தோல் சீவாமல் சுத்தமாக கழுவி அப்படியே சாப்பிட்ட வேண்டும். ஆப்பிள் தோலில் வைட்டமின் ஏ உள்ளது. பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும். கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும். தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.
சுக்கு, மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குண மாகும். பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும். இப்பகுதிக்கு சுவாரசியமான தகவல்கள், மருத்துவ குறிப்புகளை புகைப்படத்துடன் கரும்பு சோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும். விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.