லக்னோ: உத்தர பிரதேசத்தில் பண்ணை வீட்டில் இருந்து காணாமல் போன எருமை மாடுகளை போலீஸ் உயர் அதிகாரிகள் தேடி அலைந்து கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் சிறுபான்மை துறை அமைச்சராக இருப்பவர் அசம்கான். சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான இவர், அகிலேசுக்கு அடுத்த நிலையில் கருதப்படுபவர். ராம்பூர் அருகே பைசாபுரா கிராமத்தில் அசம்கானுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அங்கு ஏராளமான எருமை மாடுகள் கட்டி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று 7 எருமை மாடுகளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்த தகவல் அமைச்ச ருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அமைச்சரிடம் இருந்து ராம்பூர் எஸ்பி சாதனா கோஸ்வாமிக்கு உத்தரவு பறந்தது.
எஸ்பி தலைமையிலான போலீஸ் படை எருமையை தேடி விரைந்தது. மேலும் சில போலீஸ் அதிகாரிகளும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். எருமைகளை கண்டுபிடிக்க மோப்ப நாய் படையும் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் ஊருக்கு வெளியே வயல்களுக்கு நடுவில் உள்ள ஒரு இடத்தை சுற்றி சுற்றி வந்தது. அப்பகுதியில் நடத்திய சோதனையில் கிராமத்துக்கு சற்று தள்ளி இருந்த ஒரு கட்டிடத்தில் 7 எருமைக ளையும் மர்ம நபர்கள் சங்கிலியால் கட்டியிருப்பதை எஸ்பி சாதனா கோஸ்வாமியே கண்டுபிடித்தார். உடனடியாக தன்னுடன் வந்த போலீசாரிடம் எருமைகளை அவிழ்த்து கொண்டு வரும்படி உத்தரவிட்டார். ஒரு கும்பல் திட்டமிட்டு எருமைகளை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
எஸ்பி தலைமையிலான போலீஸ் படை எருமையை தேடி விரைந்தது. மேலும் சில போலீஸ் அதிகாரிகளும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். எருமைகளை கண்டுபிடிக்க மோப்ப நாய் படையும் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் ஊருக்கு வெளியே வயல்களுக்கு நடுவில் உள்ள ஒரு இடத்தை சுற்றி சுற்றி வந்தது. அப்பகுதியில் நடத்திய சோதனையில் கிராமத்துக்கு சற்று தள்ளி இருந்த ஒரு கட்டிடத்தில் 7 எருமைக ளையும் மர்ம நபர்கள் சங்கிலியால் கட்டியிருப்பதை எஸ்பி சாதனா கோஸ்வாமியே கண்டுபிடித்தார். உடனடியாக தன்னுடன் வந்த போலீசாரிடம் எருமைகளை அவிழ்த்து கொண்டு வரும்படி உத்தரவிட்டார். ஒரு கும்பல் திட்டமிட்டு எருமைகளை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்